அயோத்தியில் சர்ச்சையில் இருந்த ராமஜென்ம பூமி- பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுமதிக்கு பின்பு புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பதற்கு தயாராகி வரும் வேளையில் அயோத்தி நகரம் உலகமெங்கும் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. அயோத்தி புதிய ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயிலைத் திறந்து வைக்கிறார்.
இந்த விழாவில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட பல மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டப்படும் என்றவுடனேயே அந்த புனித நகருக்கு மேலும் மவுசு அதிகரித்து விட்டது. அயோத்தியில் உள்ள நிலங்களின் விலை குறைந்தபட்சம் நான்கு மடங்கு அதிகரித்து விட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தின் வேறு நகரங்களைக் காட்டிலும் அயோத்தியில் நிலம் வாங்குவதற்கு மக்களிடையே போட்டா போட்டி எழுந்துள்ளது.
அயோத்தி ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டுள்ள இந்த ஏற்றமானது இப்போதைக்குக் குறைய வாய்ப்பு இல்லை. ரியல் எஸ்டேட் துறை நிபுணர்கள் கூறுகையில், உள்ளூர் மக்களும், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அயோத்தியில் நிலத்தில் முதலீடு செய்வதற்கு அதிக ஆர்வம் காட்டுகின்றனர் என்று கூறுகின்றனர். தாஜ், ரேடிசன் போன்ற ஹோட்டல் செயின் நிறுவனங்களும் அயோத்தியில் நிலம் வாங்குவதற்கு மும்முரமாக உள்ளன.
ராமர் கோயில் அமைந்துள்ள பகுதி மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் நிலத்தின் விலை அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் பைசாபாத் ரோடு பகுதியில் விலை சதுர அடிக்கு ரூ.400 முதல் ரூ.700 வரை இருந்த நிலத்தின் 2023 அக்டோபரில் ரூ.1500 முதல் ரூ.3000 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் அயோத்தி நகரில் 2019 ஆம் ஆண்டில் விலை சதுர அடிக்கு ரூ.1000 முதல் ரூ.2000 இருந்த நிலத்தின் விலை இப்போது ரூ.4000 முதல் ரூ.6000 ஆக உயர்ந்துள்ளது. அயோத்தியில் ஜனவரி மாதத்தில் அபிநந்தன் லோதா ஹவுஸ் 25 ஏக்கர் பரப்பில் குடியிருப்பு கட்டுமானத்தை தொடங்குகிறது.
மேம்படுத்தப்பட்ட அடிப்படை வசதிகள், அயோத்தியை உலகளவில் முக்கிய இடமாக ஆக்குவதற்கு உத்தரப்பிரதேச அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ராமர் கோயில் கட்டப்பட்டதிலிருந்து அயோத்தியில் ரியல் எஸ்டேட் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. அயோத்தியின் புனிதத் தன்மையினால் முதலீட்டாளர்கள் இங்கு நிலத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கருதுகின்றனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications