உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் புதிய ராமர் கோயில் திறப்புவிழா நெருங்கிக் கொண்டிருப்பதால் அங்கு தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அயோத்தியில் ரியல் எஸ்டேட் சொத்துகள் விலை பல மடங்கு உயர்ந்து வருகிறது.
ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு இருந்த விலையைக் காட்டிலும் அயோத்தியில் உள்ள நிலங்களின் மதிப்பு 10 மடங்குக்கும் மேல் அதிகரித்துவிட்டது. உத்தரப்பிரதேசத்தில் உள்ள லக்னோ, வாரணாசி, நொய்டா, குஷி நகரைத் தொடர்ந்து ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் அயோத்தியில் அமைக்கப்பட்டு வருகிறது.

புதிய கோயில் திறப்புவிழாவுக்கு முன்பாக இந்த விமான நிலையம் திறக்கப்பட்டு விடும் 336.59 ஏக்கர் பரப்பில் ரூ.250 கோடி செலவில் அமையும் விமான நிலையத்தில் ஏர்போர்ட் டெர்மினல் மட்டும் 8000 சதுர அடி பரப்பில் அமைக்கப்படுகிறது.
இதனிடையே நிறைய குடியிருப்புகள், தனியார் ஹோட்டல்களும் அங்கு அமைக்கப்படும் எனத் தெரிகிறது. அதற்கான அனுமதியை மாநில அரசு வழங்கிவிட்டது. அயோத்தியில் உள்ள சௌடா கோசி பரிக்ரமா, ரிங் ரோடு, லக்நௌ- கோரக்பூர் ஹைவே ஆகிய பகுதிகளில் பெரும்பாலான ரியல் எஸ்டேட் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
இந்த மாத இறுதிக்குள் புதிய குடியிருப்பு திட்டத்தை தொடங்குவதற்கு அயோத்தி மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் 80 ஏக்கர் பரப்பில் அமைகிறது. லக்னோ- கோரக்பூர் ஹைவே அருகே அமையும் இத்திட்டத்துக்கான நிலம் 95 சதவீதம் கையகப்படுத்தப்பட்டுவிட்டது என்று ஆணையத்தின் செயலர் சத்யேந்திர சிங் கூறியுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட புதிய ராமர் கோயில் ஜனவரி 22ஆம் தேதியன்று திறக்கப்பட உள்ளது. இந்த கோயிலின் கட்டுமானம் 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கியது. அயோத்தியில் கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை 30,000க்கும் மேற்பட்ட நிலப்பதிவு நடைபெற்றுள்ளது.
ராமர் கோயிலில் இருந்து 15 நிமிட பயணத்தில் 25 ஏக்கர் பரப்பில் மும்பையைச் சேர்ந்த ஹவுஸ் ஆப் அபிநந்தன் லோதா ரியல் எஸ்டேட் நிறுவனம் குடியிருப்பு வளாகத்தை அமைக்கிறது.
கோயிலைச் சுற்றியுள்ள 5-10 கி.மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதாக ஸ்ரீ பாலாஜி அயோத்தியா புராப்பர்டி புரோக்கர் பரசுராம் மிஸ்ரா கூறியுள்ளார்.
இங்கு சதுர அடி ரூ.2000 முதல் ரூ.18,000 வரை விற்கப்படுவதாகக் கூறினார்.
2019இல் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதிலிருந்து நிலத்தின் விலை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications