அசிம் பிரேம்ஜி ஒரு இந்திய தொழிலதிபர், முதலீட்டாளர், பொறியாளர் மற்றும் தொண்டு செய்பவராக இருந்து வருகிறார். அசிம் பிரேம்ஜி ஜூலை 24, 1945 இல் பிறந்தவர். இவர் மென்பொருள் துறையில் உலகளாவிய தலைவரான விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவர். இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜார் என்றும் அழைக்கப்படுகிறார்.
இந்திய தொழில்நுட்பத் துறையின் முக்கிய முகமாகத் திகழ்கிறார். விப்ரோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும், தொண்டு நோக்கங்களுக்காகவும் அவர் செய்த பங்களிப்புகள் இந்திய வரலாற்றில் தனி இடம் பெற்றுள்ளன. ஆனால் தொழில்நுட்பத் துறையிலும், தொண்டு நிறுவனத்திலும் அவர் சாதித்த வெற்றிகள் போலவே, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் சுவாரஸ்யமானது. குறிப்பாக, பெங்களூரில் உள்ள அவரது ரூ.350 கோடி மதிப்புள்ள பங்களா, ஆடம்பர வாழ்க்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஒயிட்ஃபீல்டின்(Whitefield) பசுமை மையத்தில் உள்ள சொகுசு இல்லம்: பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட்(Whitefield) என்ற அமைதியான பகுதிக்குள் கட்டப்பட்டது. இந்த வீடு, ஒரு அழகிய "ஆடம்பர வீடாக" பார்க்கப்படுகிறது. இது, ஒரு ஆடம்பர வீடாக பார்க்கப்பட்டாலும், அதன் அடிப்படை அம்சம் என்னவென்றால் எளிமையும், சுற்றுச்சூழலுக்கு இருக்கும் மரியாதையும் தான். இந்த சொத்து, அரை ஏக்கர் நிலம் மற்றும் 6000 சதுர அடிகள் பரப்பளவில் உள்ளது. இது வெறும் கட்டிடம் மட்டும் இல்லை , இது அசிம் பிரேம்ஜியின் வாழ்க்கை பிரதிபலிப்பாக உள்ளது.
அழகு, அமைதி, சமநிலை ஆகிய இந்த மூன்றும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது. வீட்டை பி.என்.ஏ. பாலன் + நம்பீசன் கட்டிடக் கலை நிறுவனம் தான் வடிவமைத்தது. பாரம்பரிய செங்கல், கல் மற்றும் இயற்கை அலங்காரங்களின் கலவையுடன் கட்டப்பட்ட ஒவ்வொரு பகுதியும், பார்ப்பதற்கு ஒரு அழகிய காட்சியாகும்.
மரபும், நவீனத்துவமும் கலந்து கட்டப்பட்ட வடிவமைப்பு:இந்த வீடு பாரம்பரிய பண்ணை வீடுகள் போல் அமைந்துள்ளது. இத்தகைய பாரம்பரிய வீடு போல் அமைந்திருந்தாலும், அதற்குள் நவீன வசதிகள் அனைத்தும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கிழக்கு பகுதியில் செங்கல் உறைப்பூச்சு(Brick cladding) மற்றும் திறந்த தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கு பகுதியில் பாறை பாசிகள்(Rock mosses), பச்சை மரங்கள் மற்றும் இயற்கை நிலப்பரப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை வீடு சுற்றியுள்ள இயற்கையுடன் அதன் அழகை தெளிவாக காட்டுகின்றது.
வீட்டின் கட்டுமானம் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள், பழங்கால மர ஜன்னல்கள் மற்றும் கைவினைத்திறனை பிரதிபலிக்கும் கல் வேலைப்பாடுகளைப் பயன்படுத்துகிறது. இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமல்லாமல், பாரம்பரியத்தின் மதிப்பையும் உறுதி செய்கிறது.
நிலைத்தன்மையின் மையமாக வீடு: இந்த வீடு வெறும் பார்வைக்கு மட்டும் அழகாக இல்லாமல், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளது. இயற்கை காற்றோட்டம், சூரிய ஒளி திறன் மற்றும் பசுமையான நிலப்பரப்பு - இவை அனைத்தும் குறைந்த கார்பன் வாழ்க்கை முறைக்கு பங்களிக்கின்றன.
சூரிய சக்தி பேனல்கள், மழைநீர் சேமிப்பு அமைப்புகள், மற்றும் பசுமையான தோட்டங்கள் ஆகியவை இந்த வீட்டை நீண்டகால வாழ்வுக்கு ஒரு சிறந்த முன் உதாரணமாக மாற்றுகின்றன. மேலும், வீட்டைச் சுற்றியுள்ள பசுமையான பசுமை மற்றும் இயற்கை பூங்காக்கள் அதன் அமைதியான சூழலுக்கு மேலும் அழகை சேர்க்கின்றன.
அசிம் பிரேம்ஜியின் நன்கொடைகள்: வீட்டின் வெளிப்புற அழகைத் தவிர, பிரேம்ஜியின் உள்ளார்ந்த மனிதநேயமும் பார்க்க வேண்டியது அவசியம். அவர், "Giving Pledge" என்ற உலகப் பரபரப்பான தொண்டு பத்திரத்தில் கையெழுத்திட்ட முதல் இந்தியர். இதன் மூலம், தனது செல்வத்தின் பெரும்பகுதியை (சுமார் $21 பில்லியன் அல்லது ரூ.1.72 லட்சம் கோடி) தொண்டு நோக்கத்திற்கு செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
விப்ரோவின் தலைவர் பதவியை விலகிய பிறகு, அவர் முழுமையாக தனது தொண்டு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது நன்கொடைகள் கல்வி, சுகாதாரம், மற்றும் சமூக நலன் ஆகிய துறைகளில் பேரளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
பதிவுகளும் பாராட்டுகளும்: அசிம் பிரேம்ஜியின் இந்த சேவைகளை பாராட்டி, பத்ம விபூஷண் விருது உள்ளிட்ட பல பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத் துறையின் "ஜார்" என்று அழைக்கப்படும் இவர், ஒரு சாதாரண எண்ணெய் வணிகம் ஆரம்பித்து, இந்தியாவின் பிரபல ஐ.டி நிறுவனம் ஆகிய விப்ரோவை உருவாக்கியவர்.
அசிம் பிரேம்ஜியின் பெங்களூர் வீடு என்பது வெறும் சொத்து அல்ல. அது ஒரு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வடிவமானது. ஆடம்பரமும், எளிமையும், நிலைத்தன்மையும் ஒரே இடத்தில் இணைந்திருக்கும் இந்த வீடு, நவீன இந்தியாவின் முன்னோடி தொழிலதிபரின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு பிரதிபலிப்பு.


Click it and Unblock the Notifications