கேரளாவின் மிக முக்கியமான பணக்காரர்களில் ஒருவரான ரவி பிள்ளை வளைகுடா நாடுகளில் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வைத்துக்கொண்டு பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறார்.
மேலும் கேரளாவிலும் பல வர்த்தகத்தை வைத்துள்ளார், இந்நிலையில் நாட்டின் முன்னணி பணக்காரர்களைப் போலவே தற்போது புதிய ஹெலிகாப்டர் வாங்கியுள்ளார்.
இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக ஹெலிகாப்டர் வாங்கிய தொழிலதிபராக ரவி பிள்ளை திகழ்கிறார். சரி ஹெலிகாப்டர் விலை என்ன தெரியுமா..?!
ரவி பிள்ளை
ஆர்பி குரூப் நிறுவனத்தின் தலைவரான பி.ரவி பிள்ளை முதல் முறையாக ஒரு ஹெலிகாப்டர்-ஐ வாங்கியுள்ளார், குறிப்பாக இந்த ஹெலிகாப்டர்-ஐ இந்தியாவில் பயன்படுத்துவதற்காக வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்பஸ் ஹெலிகாப்டர்
ரவி பிள்ளை வாங்கியது ஏர்பஸ் நிறுவனத்தின் H-145 ரக ஹெலிகாப்டர், இது இந்தியாவின் முதல் ஏர்பஸ் D3 ஹெலிகாப்டர், முதல் 5 பிளேடு கொண்ட ஹெலிகாப்டர் ஆகவும் விளங்குகிறது. இதன் விலை சுமார் 100 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. இந்த ஹெலிகாப்டரில் சுமார் 7 பேர் பயணிக்கக் கூடிய அமைப்பை கொண்டது.
முதல் பயணம்
ரவி பிள்ளைக்காக ஏர்பஸ் நிறுவனம் கேரள மாநிலத்தின் கோவளத்தில் ஹெலிகாப்டரை டெலிவரி செய்துள்ளது. ஹெலிகாப்டரை கைப்பற்றிய கையோடு கோவளத்தில் இருந்து ரவிஸ் அஷ்டமுடி என்னும் ரெசார்ட்-க்கு முதல் பயணத்தை மேற்கொண்டார் ரவி பிள்ளை.
$2.5 பில்லியன் சொத்து மதிப்பு
சிட் பண்ட் கம்பெனியில் துவங்கிய இன்று பல துறையில் இந்தியா, துபாயில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்கியுள்ளார் ரவி பிள்ளை. தற்போது ஆர்பி குரூப் நிறுவனத்தில் சுமார் 70000 ஊழியர்களைக் கொண்டு சிறப்பான வளர்ச்சி பாதையில் உள்ளது. மேலும் 2.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் ரவி பிள்ளை.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications