இந்திய மக்கள் மத்தியில் ஆயுர்வேத பொருட்களுக்கு அதிகப்படியான வரவேற்பு இருக்கும் வேளையில், இத்துறையில் பிரபலமான நிறுவனமாக விளங்கும் பதஞ்சலி ஆயுர்வேத் தன்னுடைய தயாரிப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், பிரபலப்படுத்தவும் தவறான மற்றும் முறைகேடான விளம்பரங்களை வெளியிட்டது.
இதை கண்டித்த சுப்ரீம் கோர்ட் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்-க்கு நோட்டீஸ் அனுப்பி, நேரில் ஆஜராக உத்தரவிட்டு உள்ளது. இதை தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனர் பாபா ராம்தேவ் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு உள்ளார்.

பல்வேறு நோய்களைக் குணப்படுத்துவதில் பதஞ்சலி நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்த தவறான தகவல்களைப் பரப்பிய விளம்பரங்களுக்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளது.
மேலும் உச்ச நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸுக்கு பதில் அளிக்கத் தவறியது குறித்து விளக்கம் அளிக்கும்படி பதஞ்சலி இணை நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆச்சாரிய பாலகிருஷ்ணாவை ஏப்ரல் 2ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது.
இந்த உத்தரவை தொடர்ந்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. "இனி இதுப்போன்ற தவறான விளம்பரங்கள் வெளியிடப்பட மாட்டாது" என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆச்சார்ய பாலகிருஷ்ணா உறுதி அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பதஞ்சலி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மார்ச் 19 அன்று 5% க்கும் அதிகமாக சரிந்தன. ஆனால், பின்னர் பங்கு விலையில் ஓரளவு மீட்சி ஏற்பட்டு, இந்நிறுவன பங்குகள் 0.7% உயர்ந்து ரூ.1,368.80 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை வர்த்தகத்தில் Patanjali Foods பங்குகள் 0.83 சதவீதம் உயர்ந்து 1370.20 ரூபாய் அளவில் வர்த்தகமானது. பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் கொரோனா காலத்தில் தொற்று பரவுவதைத் தடுக்கும் மருந்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 27 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் முறைகேடான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்ய உத்தரவிட்டது.
மேலும் உச்ச நீதிமன்றம் தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திடம் இருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆயுஷ் அமைச்சகத்தைக் கண்டித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தை மருந்து மற்றும் மேஜிக் தீர்வுகள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம்.
ஆயுஷ் (AYUSH) - ஆயுர்வேதம், யோகா & நியுரோபதி, யுனானி, சித்த மருத்துவ முறை, ஹோமியோபதி ஆகிய இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கான அமைச்சகம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications