நாட்டின் முன்னணி இரண்டு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ அதன் 2025ஆம் நிதியாண்டிற்கான இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் சுமார் 9% அதிகரிப்பில் ரூ.2,005 கோடியாகவும், வருவாய் 22% அதிகரிப்பில் சுமார் ரூ.13,127 கோடியாகவும் அதிகரித்துள்ளது. அதேபோல், உள்நாட்டு விற்பனை 22% அதிகரித்ததுடன் அதன் ஏற்றுமதி 7% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு தற்போது ரூ.3,24,965 கோடியாக உள்ளது.
இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,836 கோடியாக இருந்த நிலையில், இந்த காலாண்டில் ரூ.2,005 கோடி நிகர லாபமாக ரூ.9% அதிகரித்துள்ளதாக அறிவித்தது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.10,777 கோடியுடன் ஒப்பிடுகையில் 22% வளர்ச்சியுடன் ரூ.13,127 கோடி செயல்பாடுகளின் மூலம் வருவாய் ஈட்டியுள்ளது.

நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஆண்டுக்கு 22% அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 6,37,556 யூனிட்களை விற்பனை செய்ததில் இருந்து தற்போது 7,76,711 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. ஏற்றுமதி 7% வளர்ச்சியை அடைந்துள்ளது. இது இந்த காலாண்டில் 4,44,793 யூனிட்டுகளாக இருந்தது. இதுவே 2024ம் நிதியாண்டில் 2வது காலாண்டில் 4,16,397 யூனிட்டுகளாக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பிரேசிலில் 10 மில்லியன் டாலர்கள் அதாவது ரூ. 84 கோடி வரையிலான கூடுதல் முதலீட்டிற்கு பஜாஜ் ஆட்டோவின் இயக்குநர்கள் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வலுவான வருவாய் வளர்ச்சி இரட்டை இலக்க அளவு வளர்ச்சிக்கு காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது. வலுவான உள்நாட்டு செயல்திறன் மற்றும் ஏற்றுமதியில் அதிகரிப்பால் இந்த காலாண்டு முடிவுகள் வலுவானதாக அமைந்துள்ளது.
பஜாஜ் ஆட்டோவின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் ரூ.95.46 (0.83%) உயர்ந்து ரூ.11,616.95-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது. நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.3,24,965 கோடி மற்றும் அதன் பி/இ விகிதம் 40.51 ஆகும். இது கடந்த 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.12,774 என்ற விலையிலும், 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூ.5,032 ஆகவும் உள்ளது.
நிறுவனத்தின் ஏற்றுமதி வருவாய் இரட்டை இலக்கத்தில் வளர்ந்தது. அதே நேரத்தில் அதன் பல்சர் இரு சக்கர வாகனம் மாடல் அதிகபட்சமாக 1 லட்சம் யூனிட்டுகளை இந்த காலாண்டில் விற்பனை செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டில் அதிகரித்த வணிகத்தில் அதன் உயர்வான வருவாய்க்கு வழிவகுத்துள்ளது. எனவே, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வணிக வாகனங்கள் இரண்டிலும் இரட்டை இலக்க வளர்ச்சியால், மின்சார ஸ்கூட்டர்களின் விற்பனையும் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மற்றும் வளர்ந்து வரும் பிரிவுகளில் வாய்ப்புகளை மேம்படுத்துவதில் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோ வலிமையின் பிரதிபலிப்பாகும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications