கண்ணீர் விடும் பெங்களூர் ஆட்டோகாரர்.. 5 மணிநேரத்தில் வெறும் 40 ரூபாய் - வீடியோ

இன்று சமுக வலைத்தளம் மக்களின் பல பிரச்சனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்களும், நிர்வாக பொறுப்பில் இருப்பவர்களும் தொடர்ந்து கவனிக்க துவங்கியுள்ளனர். இதனால் மக்கள் பிரச்சனை தொடர்பான ஒவ்வொரு வீடியோ, போட்டோ பெரிய அளவில் பகிரப்பட்டு டிரெண்டாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் வீடியோ சமுக வலைத்தளத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது. இந்த வீடியோவில் ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய ஒரு நாள் வருமானத்தையும், செலவுகளையும் கூறி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இந்த வீடியோ-வுக்கு பலர் வருத்தம் தெரிவித்திருக்கும் இதேவேளையில் பலர் திட்டியும் உள்ளனர்.

கண்ணீர் விடும் பெங்களூர் ஆட்டோகாரர்.. 5 மணிநேரத்தில் வெறும் 40 ரூபாய் - வீடியோ

பெங்களூர் ஆட்டோ சேவை மிகப்பெரிய கிட்டத்தட்ட 24 மணிநேரமும் இயங்கும் பல இடங்கள் உள்ளது. சில வருடங்கள் முன்பு பெரும்பாலான இடத்தில் ஆட்டோ மீட்டர் கொண்டு பயண நேரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால் தற்போது பெரும்பாலான இடத்தில் மீட்டரை தாண்டியும், மீட்டர் இல்லாமலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இப்படியிருக்கும் சூழ்நிலையில் ஆன்லைன் டாக்சி சேவை, பைக் டாக்சி சேவை வாயிலாக பல பிரச்சனைகளை எதிர்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் தற்போது புதிய பிரச்சனையை எதிர்கொள்வது இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ முழுவதும் கன்னட மொழியில் உள்ளது...

ஆட்டோ ஓட்டுனர் இந்த வீடியோவில் காலை 8 மணி பணிக்கு வந்த நான் 1 மணி ஆகிறது, வெறும் 40 ரூபாய் மட்டுமே சம்பாதித்துள்ளேன். ரொம்ப கஷ்டமாக உள்ளது என சட்டை பையில் இருக்கும் 40 ரூபாயை எடுத்து காட்டுகிறார். பொதுவாக 400 500 ரூபாய் வரையில் சம்பாதிப்பேன், ஆனால் இப்போது 40 ரூபாய் சம்பாதித்து சவாரி இல்லாமல் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

பெண்களுக்கு இலவச பஸ் வசதி கொடுப்பது மூலம் எங்களுடைய வருமானம் பெரிய அளவில் பாதித்துள்ளது, இதேபோல் மின்சார கட்டணமும் அதிகரித்துள்ளது என வீடியோவில் அழுதுள்ளார். பெண்களுக்கு இலவச பஸ் வசதி கொடுப்பது மூலம் ஆட்டோவில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் ஆட்டோ ஓட்டும் பணியை விட்டுவிட்டு வேறு தொழில்களுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன் என தெரிவித்தார்.

கண்ணீர் விடும் பெங்களூர் ஆட்டோகாரர்.. 5 மணிநேரத்தில் வெறும் 40 ரூபாய் - வீடியோ

இந்த வீடியோவுக்கு ரிப்ளை கொடுத்துள்ள அன்கூர் என்பவர் இலவச பஸ் மூலம் ஆட்டோ, கேப் சேவைகளுக்கு பெரிய பாதிப்பு என்றாலும், பெங்களூர் ஆட்டோ ஓட்டுனர்கள் எப்போதும் திமிருடன், அதிக கட்டணம் வசூலிப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளார்.

பெங்களூர், மும்பை, டெல்லி ஆட்டோ ஓட்டுனர்கள் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. அவர்கள் ஒருபோதும் மீட்டர் / ரேட் கார்டைப் பின்பற்றுவதில்லை, அரசாங்கத்தால் எதுவும் செய்ய முடியாது என்று எப்போதும் நினைக்கிறார்கள் என்று மற்றொரு டிவிட்டர்வாசி.

கண்ணீர் விடும் பெங்களூர் ஆட்டோகாரர்.. 5 மணிநேரத்தில் வெறும் 40 ரூபாய் - வீடியோ

எது எப்படியிருந்தாலும் ஒரு ஊழியர் தான் செய்யும் வேலையில் வருமானம் இல்லை, குழந்தைகள் கல்வி, வீட்டு செலவுகளை எப்படி சமாளிப்பது என தெரியவில்லை என கண் கலங்கும் போதும் எல்லோருக்கும் மனம் நெருடுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+