இந்தியாவில் ஈகாமர்ஸ் என்னும் ஆன்லைன் வர்த்தக தீயை மூட்டிவிட்ட சச்சின் பன்சால் தான் உருவாக்கிய பிளிப்கார்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டு, நிதி சேவை நிறுவனமான நவி டெக்னாலஜிஸ் (Navi Technologies) உருவாக்கி வேகமாக வளர்ந்து வரும் வேளையில் ஐபிஓ கூட வெளியிட திட்டமிடப்பட்டது.
இந்த சூழ்நிலையில் நவி டெக்னாலஜிஸ் நிர்வாகம் சுமார் 200 ஊழியர்களைப் பல துறைகளிலிருந்து பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி FINTECH பிரிவில் இருக்கும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள 200 ஊழியர்களுக்கு முன் அறிவிப்பு இல்லாமல் severance package மட்டுமே கொடுத்து நிறுவனத்தை விட்டு வெளியேற்றியுள்ளது. இதுவரையில் சச்சின் பன்சால் உருவாக்கிய நவி டெக்னாலஜிஸ் எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தற்போதைய வர்த்தக சந்தையில் ஸ்டார்ட்அப் நிறுவனமாக இருந்தாலும் சரி, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ள நிறுவனமாக இருந்தாலும் சரி லாபத்தில் இயங்க வேண்டும், இது மட்டும் அல்லாமல் லாபத்தில் தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்ய வேண்டும் என இல்லையெனில் முதலீட்டாளர்களை கைவிட்டு விடுவார்கள்.
குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் இது மிகவும் மோசமான நெருக்கடியாக மாறியுள்ளது. லாபம் ஈட்டக்கூடிய அளவுக்கு இல்லாத நிறுவனங்களால் புதிய முதலீடுகளைத் திரட்ட முடியவில்லை, இதனாலேயே பல நிறுவனங்கள் பணிநீக்கம், வர்த்தகத்தில் சில பகுதிகளை மூடல், வர்த்தக சந்தையை விட்டு வெளியேறுதல் என பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நவி டெக்னாலஜிஸ் நிர்வாகம் சில வாரங்களுக்கு முன்பே தனது பணிநீக்கத்தைத் தொடங்கியதாகவும், மேலும் பல ஊழியர்கள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் டிஜிட்டல் கடன் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நவி டெக்னாலஜிஸ் நிர்வாகம் தற்போது பணிநீக்கம் செய்துள்ள 200 ஊழியர்களில் சுமார் 60 முதல் 70 சதவீதம் பேர் தங்களுடைய வேலையை இழந்தது ப்ராடெக்ட் டெவலப்மென்ட் மற்றும் நிர்வாக பிரிவில் இருந்து தான் என தெரிய வந்துள்ளது. இந்த பணிநீக்கம் இந்த வார இறுதி வரையில் தொடரும் என யுவர்ஸ்டோரி தெரிவித்துள்ளது.

நவி டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிடுவதற்காகக் கொடுக்கப்பட்ட அறிக்கையில் டிசம்பர் 31, 2021 நிலவரப்படி இந்நிறுவனத்தில் 4680 ஊழியர்கள் இருந்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சச்சின் பன்சால் தலைமையிலான நவி டெக்னாலஜிஸ் சுமார் 3,350 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைத் திரட்டும் ஐபிஓ விண்ணப்பத்திற்குச் செபி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
நவி டெக்னாலஜிஸ்-ன் 3,350 கோடி ரூபாய் ஐபிஓ திட்டத்தில் இந்நிறுவனம் ரூ.2,370 கோடியை நவி டெக்னாலஜிஸ் முதலீடு செய்யும், ரூ.150 கோடியை நவி ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டு இருந்தது. இதேநேரத்தில் மீதமுள்ள தொகையை பொது கார்ப்பரேட் நிர்வாக பணிகளுக்காகப் பயன்படுத்த உள்ளதாகச் செபி-க்கு கொடுக்க அறிக்கையில் தெரிவித்திருந்தது.
More From GoodReturns

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications