இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் பல கடந்த 2 வருடத்தில் போதுமான முதலீட்டையும் வர்த்தகத்தையும் பெற முடியாமல் தவித்து வருகிறது. சீனா முதலீடுகளுக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குப் போதுமான முதலீடுகள் கிடைக்காமல் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி பர்னிச்சர் ரென்டல் ஸ்டார்ட்அப் நிறுவனமான Furlenco தனது ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பெங்களூர் Furlenco
பெங்களூரில் பல லட்சம் பேரை வாடிக்கையாளர்களாகக் கொண்டு இருக்கும் பர்னிச்சர் ஸ்டார்ட்அப் நிறுவனமான Furlenco நிர்வாக மறு சீரமைப்பு நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் சுமார் 180-200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
200 ஊழியர்கள் பணிநீக்கம்
Furlenco தற்போது அறிவித்துள்ள 200 ஊழியர்கள் பணிநீக்க முடிவில் அதிகப்படியான ஊழியர்களை, வாடிக்கையாளர் சேவை பிரிவில் இருந்து குறிப்பாகக் குறைகளை நிர்வகித்தல், திட்டமிடுதல் மற்றும் பிற செயல்பாடுகளில் பணியாற்றி வரும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட உள்ளது.
பணிநீக்கம்
புனே, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய பகுதிகளில் இருக்கும் Furlenco நிறுவனம் தனது வர்த்தக சேவைகளைப் படிப்படியாகக் குறைக்க முடிவு செய்துள்ள நிலையில், தற்போது ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. Furlenco நிறுவனம் இதுவரையில் சுமார் 60 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைத் திரட்டியுள்ளது.
3ஆம் தரப்பு நிறுவனம்
இதோடு சொத்து மேலாண்மை, பழுது நீக்கம், மெயின்டனன்ஸ், சொத்துத் திரும்பப் பெறுதல் போன்ற முக்கியமான சேவைகளுக்குப் புதிதாக 3ஆம் தரப்பு நிறுவனத்தையும் நியமித்துள்ளது. இதன் மூலம் இனி Furlenco நிறுவனம் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய முடிவு செய்துள்ளது, இதனால் ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
அஜித் மோகன் கரிம்பனா
2012ல் கோல்டுமேன் சாச்சஸ், மோர்கன் ஸ்டான்லி போன்ற முன்னணி நிறுவனத்தில் பணியாற்றிய அஜித் மோகன் கரிம்பனா பர்னிச்சர் வாடகை சேவையை அளிக்கும் Furlenco நிறுவனத்தைத் துவங்கினார். வேகமாக இயங்கும் வாழ்க்கை முறையில் இத்தகைய சேவை இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகளவில் வரவேற்பு பெற்றது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications