இந்தியாவின் அண்டை நாடான பங்களாதேஷ் கடந்த 10- 15 வருடத்தில் மிகப்பெரிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்த நாடு, ஆனால் கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பாதிப்பு பெரும் தாக்கத்தை அந்நாட்டில் உருவாகி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இதேவேளையில் நிதி நிலையும் பாதிக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில் Bangladesh அரசு தனது நிதி நிலை, நாணய மதிப்பு ஆகியவற்றை மேம்படுத்த முக்கிய முடிவை எடுத்துள்ளது. பங்களாதேஷ் அரசு அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கவும், தொடர்ந்து அமெரிக்க டாலர்களை தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்துதை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.

இதற்காக பங்களாதேஷ் அரசு சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு ஏற்றுமதி வர்த்தகத்திற்கு டாலருக்கு பதிலாக சீன யுவான் நாணயத்தை பயன்படுத்த உள்ளதாக அறிவித்தது. இதை தொடர்ந்து தற்போது பங்களாதேஷ் நாட்டின் இரண்டு வங்கிகள் இந்திய ரூபாயில் வர்த்தக பரிவர்த்தனைகளை செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் ஐசிஐசிஐ வங்கி உடன் ரூபாய் கணக்குகளை பங்களாதேஷ் நாட்டின் ஈஸ்டர்ன் வங்கி மற்றும் சோனாலி வங்கி துவங்கியுள்ளது. இதன் மூலம் ஜூலை 11 முதல் ரூபாய் வர்த்தகத்திற்கான திட்டத்தை இந்தியா - பங்களாதேஷ் நாடுகள் மத்தியில் நடக்க உள்ளது.
ஈஸ்டர்ன் வங்கி மற்றும் சோனாலி வங்கி ஆகியவை இந்தியா உடனான வர்த்தகத்தில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வர்த்தகத்திற்கும் இந்திய ரூபாயை பயன்படுத்த உள்ளது. இதன் மூலம் டாலர் இருப்பை நிலை நிறுத்தி தனது நிதி நிலை மற்றும் நாணய மதிப்பை மேம்படுத்தும் என நம்புகிறது.
இது மறைமுகமாக இந்தியா ரூபாய்க்கான டிமாண்ட் அதிகரித்து அதன் மதிப்பீட்டை உயர்த்தி டாலரின் ஆதிக்கத்தை குறைக்கவும், அமெரிக்க டாலருக்கு எதிரான மதிப்பை உயர்த்தவும் முடியும். வளரும் நாடுகள் மத்தியில் டாலருக்கு எதிரான போராட்டத்தில் சீனா யுவான் மற்றும் இந்திய ரூபாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
2021-22 ஆம் நிதியாண்டில் பங்களாதேஷ், இந்திய நாட்டில் இருந்து 14 பில்லியன் டாலர் அளவிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா, பங்களாதேஷ் நாட்டிற்கு முக்கிய சப்ளையராக உள்ளது. இதவேளையில் பங்களாதேஷ் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வெறும் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

இதை தான் ஒரு வாரமாக அட்டாக் பண்றாங்களா? ஈரான் போரில் நடப்பது என்ன? அமெரிக்கா, இஸ்ரேல் சொல்வது பொய்யா?

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?



Click it and Unblock the Notifications