ராஜா கைய வச்சா அது ராங்கா போயிடுமா என்பது போல் கடந்த ஒரு மாதமாக பங்களாதேஷ் அரசுக்கும், இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி-க்கு சொந்தமான அதானி பவர் நிறுவனத்திற்கும் மத்தியில் காரசாரமான விவாதம் நடந்து வந்த நிலையில், வேறு வழியே இல்லாமல் பங்களாதேஷ் அரசு தற்போது வழிக்கு வந்துள்ளது.
அதானி பவர் நிறுவனம் பங்களாதேஷ் நாட்டிற்கு மின்சாரம் வழங்கும் முக்கியமான நிறுவனமாகும். இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடா மின் நிலையத்திலிருந்து பங்களாதேஷுக்கு சுமார் 1,600 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இருந்து முதல் முறையாக வெளிநாட்டுக்கு மின்சாரம் விற்பனை செய்யும் ஒப்பந்தம் இது.

இந்நிலையில், பங்களாதேஷ் மின் வளர்ச்சி வாரியம் (BPDB) க்கு அதானி பவர் செலுத்த வேண்டிய நிலுவை தொகை 843 மில்லியன் டாலருக்கு (7000 கோடி ரூபாய்) அதிகமாகியுள்ளது. இந்த நிலுவை தொகையைச் செலுத்தா காரணத்தால், அதானி பவர் தனது மின்சார விநியோகத்தை பாதியாக குறைத்து, இதுமட்டும் இல்லாமல் அடுத்த சில நாட்களுக்குள் முழுமையாக நிறுத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த பிரச்சனைக்கு தற்காலிக தீர்வாக, பங்களாதேஷ் மின் வளர்ச்சி வாரியம் 173 மில்லியன் டாலர் (1450 கோடி ரூபாய்) மதிப்பிலான புதிய கடன் கடிதத்தை (LC - Line of Credit) அதானி பவருக்கு வழங்கியுள்ளது. இதன் மூலம், அதானி பவர் தொடர்ந்து மின்சாரம் வழங்கும் உத்தரவாதத்தை கொடுத்துள்ளது. ஆனால் தற்போது அளிக்கப்படும் 800 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே விநியோகிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
அதானி பவர், பங்களாதேஷ் மின் வளர்ச்சி வாரியத்திடம் கூடுதலாக 15-20 மில்லியன் டாலர் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தொகை கொடுத்தால் தான் இல்லையெனில், கோடா மின் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் 800 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது அதானி பவர்.
பொருளாதார சிக்கலில் இருக்கும் பங்களாதேஷ் நாட்டிற்கு அதானி பவர் மூலம் கிடைக்கும் மின்சாரம் கட்டாயம் அவசியம். இப்படியிருக்கும் போது தான் புதிதாக பங்களாதேஷ் நாட்டில் உருவான அரசு, முந்தைய அரசு அதானி குழுமத்துடன் செய்த ஒப்பந்தம் மிகவும் காஸ்ட்லியாக உள்ளது என்று அறிவித்து, இந்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வதாக அறிவித்தது.
இதேவேளையில் அதானி பவர்-க்கு செலுத்த வேண்டிய தொகையை நிறுத்தி வைத்ததன் விளைவாக அதானி பவர் மின்சார விநியோகத்தை பாதியாக குறைத்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications