கொரோனா தொற்று நோயின் காரணமாக கடுமையான நெருக்கடி நிலையே நிலவி வருகின்றது.
இதன் காரணமாக வங்கிகளில் கடன் வளர்ச்சியானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 54,000 கோடி ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது.
இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 102.11 டிரில்லியன் ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 102.65 டிரில்லியன் ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடன் வளர்ச்சி
ரிசர்வ் வங்கி தரவின் படி, கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது கடன் வளர்ச்சி ஆகஸ்ட் 28-வுடன் முடிவடைந்த 15 நாட்களில் 5.5 சதவீதமாக இருந்தது. இதே இதற்கு முந்தைய ஆண்டில் இதே 15 நாட்களில் கடன் வளர்ச்சியானது இரு மடங்காக 10.2 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இது நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மந்த நிலை, இதன் காரணமாக தேவை குறைவு என்பன பல, வங்கித் துறையில் இத்தகைய பிரதிபலிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடன் வளர்ச்சி குறைவு
சொல்லப்போனால் ஆகஸ்ட் 2020 மாதத்தில் கொரோனா லாக்டவுனில் விதிகப்பட்ட பல கட்டுப்பாடுகள், தளர்த்தப்பட்டதுடன், அரசும், பணப்புழக்கத்தினை ஊக்குவிக்கும் பொருட்டும், தொழில் துறை வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், பிணையில்லா கடனை ஊக்குவித்தது. ஆனாலும் இன்று வரையிலும் கூட கடன் வளர்ச்சி குறைந்தே காணப்படுகிறது.
40 வருடங்களில் இல்லாதளவுக்கு வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலேயே 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் வளர்ச்சி வீழ்ச்சி கண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் ஆகஸ்ட் மாதத்தில் கடன் வளர்ச்சியும் இந்தளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இதே ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளில் டெபாசிட் 15,000 கோடி ரூபாய்க்கு மேல் செய்யப்பட்டுள்ளது.
கடன் வளர்ச்சி அவசியம்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின ஊக்குவிக்கவும், வேலை வாய்ப்பினை அதிகரிக்கவும் கடன் வளர்ச்சி மிக அவசியம். வாராக்கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து, தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பதை அரசு எளிமைப்படுத்த வேண்டும். ஏனெனில் நிறுவனங்கள் முதலீட்டினை அதிகரிக்கும் போது அது வளர்ச்சிக்கு வித்திடும். அவ்வாறு வளர்ச்சி கூடும் போது, வேலை வாய்ப்புகளும் கூடும். இதனால் உற்பத்தி விகிதமும் அதிகரிக்கும். மக்களின் கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் போது நுகர்வும் அதிகரிக்கும். இது வளர்ச்சிக்கு வித்திடும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications