தீபாவளி பண்டிகை: அக்டோபர் 20 & 21 ஆகிய இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறையா?

இந்தியாவில் ஒளி திருநாளான தீபாவளி, ஒரு நாள் பண்டிகை மட்டுமல்ல. இதன் கொண்டாட்டங்கள் பல நாட்கள் நீடிக்கும். ஒவ்வொரு நாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு. பெரும்பாலான மாநிலங்களில் அக்டோபர் 20 அன்றும், சில மாநிலங்களில் 21 அன்றும் என பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதில் எந்த நாட்களில் எல்லாம் வங்கிகள் செயல்படாது என்பதை காணலாம்.

2025 அக்டோபர் 20 அன்று திரிபுரா, குஜராத், மிசோரம், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், அசாம், தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், கேரளா, நாகாலாந்து, மேற்கு வங்கம், டெல்லி, கோவா, சத்தீஸ்கர், ஜார்கண்ட், மேகாலயா, இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திங்களன்று தமிழ்நாட்டில் வங்கிகள் செயல்படாது.

தீபாவளி பண்டிகை: அக்டோபர் 20 & 21 ஆகிய இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறையா?

அக்டோபர் 21, 2025 அன்று மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், மணிப்பூர், சத்தீஸ்கர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் தீபாவளி அமாவாசை (லட்சுமி பூஜை), தீபாவளி மற்றும் கோவர்தன் பூஜைக்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

சில மாநிலங்களில் 5 நாட்கள் வரை வங்கி விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிக்கிமில் அக்டோபர் 20 முதல் 23 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி விடுமுறை உண்டு. ஞாயிற்றுக்கிழமையும் இதில் அடங்கும். சத்தீஸ்கரில் அக்டோபர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் வங்கி விடுமுறை; ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் வங்கி விடுமுறை. குஜராத் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இரு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

அக்டோபர் 22, 2025 அன்று குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரகாண்ட், சிக்கிம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தீபாவளி, விக்ரம் சம்வத் புத்தாண்டு, கோவர்தன் பூஜை, பலிபத்யாமி மற்றும் லட்சுமி பூஜை ஆகியவற்றை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

அக்டோபர் 23, 2025 அன்று பாய் தூஜ், சித்ரகுப்த் ஜெயந்தி, லட்சுமி பூஜை, பராத்ரித்விதயா மற்றும் நிங்கால் சக்கோபா ஆகிய பண்டிகைகளுக்காக குஜராத், சிக்கிம், மணிப்பூர், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.

2025 அக்டோபரில் ஆயுத பூஜை, விஜயதசமி, துர்கா பூஜை, மகாத்மா காந்தி ஜெயந்தி, லட்சுமி பூஜை, மகரிஷி வால்மீகி ஜெயந்தி, குமார் பௌர்ணமி, கர்வா சௌத், கட்டி பிஹு, தீபாவளி, நரக சதுர்தசி, கோவர்தன் பூஜை, பலிபத்யாமி, பாய் தூஜ், சத் பூஜை மற்றும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் போன்ற பல்வேறு விழாக்களுக்காக வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+