நடப்பு செப்டம்பரில் மாதத்தில் மொத்தம் 30 நாட்களில், 9 நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளது.
இந்த விடுமுறை காலத்தில் பணத் தட்டுப்பாடு ஏற்பாடு வாய்ப்புள்ளதால் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வங்கிகளுக்கு விடுமுறை என்றாலும், இந்த காலத்தில் தேவை இருக்கும் பட்சத்தில் பண நெருக்கடி ஏற்படலாம். ஆக மக்கள் முன்னதாகவே பணத்தை எடுத்து வைத்துக் கொள்ளலாம் அல்லது முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.
இங்கு மட்டும் தான் விடுமுறை
இந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி பாங் - லாப்சோல் (Pang-Lhabsol ) மற்றும் ஸ்ரீ நாரயண குரு ஜெயந்தி கொண்டாடப்படுவதால், இன்று வங்கிகளுக்கு சில மாநிலங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது கேங்டோக், கொச்சின், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் கொண்டாடபடுவதால் அந்தந்த பகுதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரு நாட்கள் விடுமுறை
இதனையடுத்து செப்டம்பர் 6 வழக்கம்போல் ஞாயிற்றுகிழமை பொதுவிடுமுறை, இதனையடுத்து செப்டம்பர் 12 இரண்டாவது சனிக்கிழமை ஆதாலால் அனைத்து மாநிலங்களிலும் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 13 ஞாயிற்றுகிழமை என்பதால் அன்றும் பொதுவிடுமுறை. ஆக தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாக உள்ளது.
மகால்ய அம்மாவாசை
செப்டம்பர் 17 அன்று மகால்ய அம்மாவாசை என்பதால், அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா, ஓடிசா உள்ளிட்ட மா நிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 20 அன்று ஞாயிற்றுகிழமையன்று வழக்கம்போல் பொதுவிடுமுறை. செப்டம்பர் 21 அன்று ஸ்ரீ நாரயண குரு சமாதி தினம் கேரளாவின் கொச்சின், திருவனந்தபுரத்தில் கொண்டாடப்படுகிறது. ஆக அப்பகுதிகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 26 நான் காவது சனிக்கிழமை, செப்டம்பர் 27 ஞாயிற்றுகிழமையன்று பொது விடுமுறை என்பதால் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் விடுமுறை.
திட்டமிட்டு செயல்படுங்கள்
இந்த விடுமுறை நாட்களில் அனைத்து வங்கிகளிலும் விடுமுறை என்பதால், ஏடிஎம்களில் பணம் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. ஆக மக்கள் அதற்கேற்றவாறு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும், கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட இப்போதிலிருந்தே அதற்காக தங்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல பணம் செலுத்த வேண்டிய இடங்களிலும் விரைவில் முன் கூட்டியே செலுத்தி விடலாம். ஏனெனில் கடைசி நிமிடத்தில் கேஸ் மெஷினில் செலுத்திவிடலாம் என்றும் பலர் நினைப்பர். ஆனால் இவ்விடுமுறை நாட்களில அனைவரும் இம்மெஷினையே நாடுவதால், மெஷின்களில் போடமுடியாமல் போகலாம். ஆக உஷாராயிருங்க..