இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தான் மக்களின் மிக முக்கியமான கடன் ஆதாரமாக செயல்படுகின்றன. ஆர்பிஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதால் நம்பிக்கையோடு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் ,தொழில் புரிவதற்கான கடன் , தனிநபர் கடன் உள்ளிட்டவற்றை நாம் வாங்குகிறோம்.
வங்கிகள் ஒருபுறம் மக்களிடம் இருந்து டெபாசிட்டாக பணத்தை பெறுகிறது, அந்த பணத்தை பயன்படுத்தி தான் மற்றவர்களுக்கு கடன் வழங்குகிறது. இது ரொடேஷன் முறையில் செயல்படுகிறது. தற்போது இதில் தான் பெரிய சிக்கலே உண்டாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது மக்கள் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்து டெபாசிட் செய்யும் விகிதம் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதைதான் loan to deposit ratio என அழைக்கிறார்கள். ஒரு வங்கி தன்வசம் இருக்கும் எவ்வளவு டெபாசிட் பணத்தை கடன் வழங்குவதற்காக பயன்படுத்துகிறது என்பதை குறிக்கும் ஒரு குறியீடு. இதனை பயன்படுத்தி அந்த வங்கியிடம் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். வங்கியால் சீரான செயல்பட முடியுமா என்பதையும் கணக்கிட முடியும். தற்போது இந்தியாவில் செயல்படக்கூடிய பல்வேறு வங்கிகளிலும் இந்த லோன் டு டெபாசிட் ரேஷியோ வரலாற்றில் இல்லாத உச்சமாக 81% என்ற அளவை எட்டி இருக்கிறது.
டிசம்பர் மாத காலாண்டில் லோன் டூ டெபாசிட் ரேஷியோ அதிகமாகி இருக்கிறது. எனவே இந்திய வங்கிகளில் கடன் வளர்ச்சிக்கும், வைப்பு தொகைக்கும் இடையிலான தொடர்ச்சியான வேறுபாடை அடிக்கோடிட்டு காட்டுகிறது இது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி-இல் 2024 டிசம்பருடன் ஒப்பிடும்போது 2025 டிசம்பரில் கடன் வழங்கும் அளவு 12 சதவீதமாக உயர்ந்தது ஆனால் டெபாசிட்டுகள் பெற விகிதம் வெறும் 11.5 சதவீதமாக இருக்கிறது. இது அதற்கு முந்தைய காலாண்டில் இது 16 சதவீதமாக இருந்தது.

இந்தியாவில் தற்போது பல்வேறு வங்கிகளிலும் இதேதான் நிலைமை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்திய வங்கி அமைப்பை பொருத்தவரை தற்போது டெபாசிட் எனப்படும் வைப்பு தொகை கணிசமான அளவு குறைந்து கடன் வழங்கும் அளவு வேகமாக வளர்ச்சி அடைகிறது என தெரிவிக்கின்றனர் . பேங்க் ஆப் பரோடா வங்கியை பொறுத்தவரை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு டிசம்பரில் கடன் அளவு 14.57% என வளர்ச்சி அடைந்திருக்கிறது ஆனால் டெபாசிட் வீதம் 10.25% ஆக தான் இருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வழங்குவது 11% டெபாசிட் வருகை 8.5% வளர்ச்சி தான் எட்டி இருக்கின்றன.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் வழங்கும் விகிதம் 7.13 சதவீதமாகவும் டெபாசிட் வபெரும் விகிதம் 3.4 சதவீதம் என்றுமே வளர்ச்சி அடைந்திருக்கின்றன. தற்போது இந்தியாவின் பெரும்பாலான வங்கிகளில் இந்த லோன் டு டெபாசிட் விகிதம் என்பது 81 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறது என கூறும் நக்வாரி கேப்பிட்டல் தலைவரான சுரேஷ் கணபதி இந்த நிலைமை நீடித்தால் வங்கிகள் டெபாசிட்களுக்கான வட்டிகளை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் அல்லது ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்புக்கு ஏற்ப கடன்களுக்கான வட்டிகளை குறைக்காமல் இருக்கலாம் என கூறுகிறார்.
இந்திய வங்கிகளில் டெபாசிட் விகிதங்கள் குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 1.5% என குறைத்தன. இதனால் வங்கிகள் தங்களுடைய வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களுக்கான வட்டிகளை குறைத்தன அதேவேளையில் டெபாசிட்டுகளுக்கு வழங்கி வந்த வட்டிகளும் குறைந்தன.
மக்களுக்கு தற்போது மியூச்சுவல் ஃபண்ட், பங்கு சந்தை முதலீடுகள் மற்றும் மாற்று முதலீடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் வங்கி டெபாசிட் திட்டங்களை விட அதிக வருமானம் தரக்கூடிய தபால் நிலையத் திட்டங்கள் மற்றும் பிற முதலீடுகளை நாட தொடங்கி இருக்கின்றனர். இது வங்கிகளுக்கான டெபாசிட் வருகையை கணிசமாக குறைத்து இருக்கிறது இந்த போக்கு இன்னும் நீடிக்கும் பட்சத்தில் வங்கிகளின் பேலன்ஸே ஆட்டம் காணும் என எச்சரிக்கப்படுகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications