இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் டிஜிட்டல் சேவையான BOB வேர்ல்ட் மொபைல் செயலியில், புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டது. இதற்கு காரணமாக மேற்பார்வை குறைபாடுகள் தொடர்பான ஆவணங்களை மேற்கோள்காட்டி இந்த தடை அறிவிப்பை வெளியிட்டது.

ரிசர்வ் வங்கி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949 இன் பிரிவு 35A இன் கீழ், பேங்க் ஆஃப் பரோடாவு-க்கு BOB வேர்ல்ட் மொபைல் செயலியில் புதிதாக வாடிக்கையாளர்களை சேர்ப்பதை உடனடியாக நிறுத்த இந்த உத்தரவை வெளியிட்டு உள்ளது. BOB வேர்ல்ட் செயலி மூலம் சேர்க்கப்படும் வங்கி வாடிக்கையாளர்கள் நடைமுறையில் பல்வேறு பிரச்சனைகளை கண்டறிந்த காரணத்தால் ஆர்பிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
ஒரு வங்கியில் டெபாசிட் செய்பவர்களின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அல்லது வங்கியின் நலன்களுக்கு பாதகமான முறையில் வங்கி நிர்வாகத்தின் எந்தவொரு நடவடிக்கைகளையும் தடுக்க ரிசர்வ் வங்கி பிரிவு 35A இன் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அதன் முகவர்களுக்கு பணத்தை திருடுவதை எளிதாக்கியுள்ளதாக அல் ஜசீரா பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சில ஏஜெண்ட்கள் சுமார் 362 வாடிக்கையாளர்களிடம் இருந்து 22 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை திருடியுள்ளது பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் உள் தணிக்கை அறிக்கைகள் மற்றும் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது என தெரிவித்துள்ளது.

BOB வங்கி வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் வங்கி கணக்குகளின் அதிகாரத்தை முறைகேடாக பெற்ற சில ஏஜெண்ட்கள் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து பெரும் தொகையை திருடப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஜசீரா பத்திரிக்கை இதற்கு முன்பு பேங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றொரு குற்றச்சாட்டையும் முன்வைத்தது.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் மொபைல் பேங்கிங் செயலியான BoB வேர்ல்டு-ல் ரிஜிஸ்ட்ரேஷன் எண்ணிக்கையை அதிகரிக்க வங்கி வாடிக்கையாளர் மொபைல் நம்பரை உரிய கணக்குடன் இணைக்காமல் வங்கியின் அதிகாரிகள் மற்றும் அவர்கள் தொடர்புடையோரின் தொலைபேசி எண்களைப் பயன்படுத்தியதாக மீது குற்றச்சாட்டுகள் எழுந்த சில மாதங்களில் ஆர்பிஐ உத்தரவு வந்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
அல் ஜசீரா பத்திரிக்கை மார்ச் 2022 இல், போபால் மண்டலத்தில் BoB அதிகாரிகளுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வங்கியின் புதிய செயலியான "பாப் வேர்ல்ட்" க்கு, குறைந்தபட்சம் 150 வங்கி வாடிக்கையாளர்களை சேர்க்க இலக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
வங்கி அதிகாரிகள் மக்களை இதில் இணைப்பதில் அதிகப்படியான சவால்களை எதிர்கொண்ட காரணத்தால், தவறான வழிகளை பயன்படுத்தியதாக அல் ஜசீரா தெரிவித்தது.
அல் ஜசீரா அறிக்கையின் படி, சில பேக்ங் ஆஃப் பரோடா வங்கி அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள், மொபைல் எண்களுடன் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகளின் பட்டியலைப் பெற்றுள்ளனர். செயலி பதிவுக்குத் தேவையான OTP-ஐ உருவாக்க வங்கி ஊழியர்கள், வங்கி துப்புரவு மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட பல்வேறு மொபைல் எண்களுடன் இந்தக் கணக்குகளை இணைத்தனர்.
இதன் பின்பு பேக்என்ட்-ல் இருந்து இந்தக் கணக்குகளைப் பதிவுசெய்த பிறகு, இணைப்பை நீக்கிவிட்டு அதே மொபைல் எண்களை மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மீண்டும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள BoB ஊழியர்களும் தங்கள் இலக்குகளை அடைய இந்த நடைமுறையைப் பயன்படுத்தியதாக அல் ஜசீரா குற்றம் சாட்டியுள்ளது.
குஜராத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நிர்வாகி ஒருவர், BOB வங்கியின் உயர் நிர்வாகத்திற்கு ஐந்து ஈமெயில் அனுப்பியதன் மூலம் இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications