UFBU மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையேயான சமரச கூட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் முதலில் திட்டமிடப்பட்ட இரண்டு நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை இந்தியாவின் ஐக்கிய வங்கி சங்கங்களின் அமைப்பு (UFBU) ஒத்திவைத்துள்ளதாகச் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்கள் பல வருடங்களாக அவ்வப்போது போராட்டம் நடத்தி வரும் வேளையில், பட்ஜெட் அறிவிப்புக்கு முன்பு ஜனவரி 30, 31 ஆம் தேதிகளில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தது.
இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி கூட இக்காலகட்டத்தில் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என அறிவித்து இருந்தது. ஆனால் தற்போது வங்கி ஊழியர்கள் அமைப்பு இந்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.
UFBU அமைப்பு
யூனியன் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்கள் இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக இவ்விரு நாட்களில் வங்கிக் கிளைகளில் பணிகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளது.
ஜனவரி 30 - 31
யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்கள் (UFBU) தனது கிளை அமைப்புகளுக்கு ஜனவரி 30 - 31 ஆகிய நாட்களில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இதன் மூலம் யுனைடெட் ஃபோரம் ஆ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பின் கீழ் AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகிய அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டத்தில் கலந்துகொள்வதாகக் கூறப்பட்டது.
ஒத்திவைப்பு
இந்த நிலையில் UFBU மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் இடையேயான சமரச கூட்டத்திற்குப் பிறகு, ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில் முதலில் திட்டமிடப்பட்ட இரண்டு நாள் நாடு தழுவிய வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை UFBU ஒத்திவைத்துள்ளதாகச் சனிக்கிழமை (இன்று) அறிவித்துள்ளது.
சி எச் வெங்கடாசலம்
இந்த நிலையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி எச் வெங்கடாசலம் கூறுகையில் ஐபிஏ ஜனவரி 31 அன்று தொழிற்சங்கங்களைச் சந்தித்து ஐந்து நாள் வங்கி சேவை, ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை விவாதிக்க ஒப்புக்கொண்டு உள்ளது.
தொழிற்சங்கங்களின் குடை
UFBU என்பது பல வங்கி தொழிற்சங்கங்களின் குடை அமைப்பாகும். இந்த அமைப்பு சந்திக்கும் பிற பிரச்சினைகளை, அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்களுடன் தனித்தனியாக விவாதம் செய்ய ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
முக்கியக் கோரிக்கை
தற்போது வங்கி ஊழியர்கள் அமைப்பு அமைப்பு ஐந்து நாள் வங்கிச் சேவை, ஓய்வூதியத்தைப் புதுப்பித்தல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், ஊதிய திருத்தம் குறித்த சாசனம் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துப் போராட்டம் நடத்தி வருகிறது.
ஊழியர்கள் பற்றாக்குறை
இதேபோல் அனைத்து காலி பணியிடங்களிலும், வங்கி கிளைகளிலும் போதிய ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தற்போது இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications