டெல்லி: மக்கள் சிரமப்படாமல் வங்கி சேவைகளைச் செய்து கொள்ள, அனைத்து பொதுத் துறை வங்கிகளின் வேலை நேரத்தையும் மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க மாற்றம் செய்து இருக்கிறார்களாம். இந்த புதிய வேலை நேரம் இன்றில் இருந்து (நவம்பர் 01, 2019 வெள்ளிக்கிழமை) மகாராஷ்டிரம் முழுக்க அமலுக்கு வருகிறதாம். ஒவ்வொரு வங்கிக் கிளையும் அது அமைந்து இருக்கும் இடத்தைப் பொறுத்து தான் இந்த புதிய வேலை நேரத்தை நிர்ணயித்து இருக்கிறார்களாம்.
பொதுவாக வங்கி வேலை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் தான் இருக்கிறது. ஆனால் சில வங்கிகள் அல்லது சில வங்கிக் கிளைகள் தங்களுக்கு தோதான மற்ற சில வேலை நேரங்களைப் பின் பற்றிக் கொண்டு இருக்கிறார்களாம். இப்போது இந்த சீரற்ற வேலை நேரங்களை எல்லாம் மாற்றி, எல்லா பொதுத் துறை வங்கிகளுக்கும், புதிய வேலை நேரத்தை அறிவித்து இருக்கிறார்கள்.

குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுத் துறை வங்கிகள் செயல்படும். மாலை 3 மணி வரை மட்டுமே பொதுமக்கள் வங்கிச் சேவையை பயன்படுத்த முடியும்.
அதே போல வணிகப் பகுதிகளில், பொதுத் துறை வங்கிகள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். மக்கள் பயன்பாடு மாலை 5 மணி வரை மட்டுமே.
இந்த இரண்டு பகுதிகளையும் சேராத பொது இடங்களில் இருக்கும் வங்கிக் கிளைகள், வழக்கம் போல, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மக்கள் மாலை 4 மணி வரை வங்கிக் கிளைகளுக்குச் சென்று பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த மூன்று வேலை நேர திட்டத்தை, இந்தியாவில் இருக்கும் அனைத்து பொதுத் துறை வங்கிகளுக்கும் அமல்படுத்த இந்திய வங்கிகள் சங்கம் ஏற்கனவே அனுமதி கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மாநில வங்கி கமிட்டியை (State Level Bankers' Committee - SLBC) அனைத்து வங்கி தலைமை அதிகாரிகளிடமும் பேசி, மாநிலம் முழுக்க அனைத்து பொதுத் துறை வங்கிகளிலும், ஒருங்கிணைந்த வேலை நேரத்தை நிர்ணயிக்குமாறு சொல்லி இருக்கிறார்களாம். அதில் மகாராஷ்டிரா மாநிலம் தற்போது, முதல் மாநிலமாக தன் வங்கி வேலை நேரத்தை மாற்றி அமைத்து இருக்கிறது. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் இனி புதிய வங்கி வேலை நேர மாற்றம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications