டிசம்பர் 2022 காலாண்டில் திவால் வழக்குகளின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் செயல்முறை மூலம் கடன் தொகையைத் திரும்ப மீட்டெடுப்பது இக்காலகட்டத்தில் மிகக் குறைவான அளவாக 23.45 சதவீதமாக இருந்தது என்று தரவுகள் கூறுகிறது.
திவால் மனுக்கள் அதாவது insolvency petitions எண்ணிக்கை செங்குத்தாக 25 சதவிகிதம் அதிகரித்தாலும், 2023 ஆம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு வரை ஒட்டுமொத்த கடன் மீட்பு விகிதம் வெறும் 30.4 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. இதன் மூலம் 69.6 சதவிகித கடன் தொகையை மீட்க முடியாமல் உள்ளது.
கேர் ரேட்டிங்ஸ் நடத்திய சமீபத்திய திவால் வாரியமான IBBI-யின் பகுப்பாய்வின்படி, ஒட்டுமொத்த மீட்பு விகிதம் 2020 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 43 சதவீதத்திலிருந்தும், 2022 ஆம் நிதியாண்டில் 4வது காலாண்டில் 32.9 சதவீதத்திலிருந்தும் தற்போது டிசம்பர் காலாண்டில் கடன் மீட்பு தொகை அளவு 23.45 சதவீதமாகக் குறைந்துள்ளது.
கேர் ரேட்டிங்ஸ்
கேர் ரேட்டிங்ஸ் ஏஜென்சியின் மூத்த இயக்குனரான சஞ்சய் அகர்வால் கூறுகையில், பெரும்பாலான பெரிய கடன் தீர்மானங்கள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுவிட்டதாலும், தற்போது நிலுவையில் உள்ள கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகள் BIFR வழக்குகள் மற்றும் அல்லது உயர் தீர்வு காலம் தேவைப்படும் மற்றும் குறைந்த மீட்டெடுக்கக்கூடிய மதிப்புடன் இருக்கும் வழக்குகளாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
திவால் நிலை மற்றும் திவால் கோட்
2016 இல் திவால் நிலை மற்றும் திவால் கோட் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து ஒவ்வொரு காலாண்டிலும் திவால் செயல்முறைக்காக அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, இதன் மூலம் கடன் தீர்வுக்காக IBC-ஐ பயனுள்ளதாக ஏற்றுக்கொள்ளப்படுவதைக் காட்டுகிறது.
திவால் வழக்குகள்
2021-2022 ஆம் நிதியாண்டின் கடைசிச் சில காலாண்டுகளில் திவால் வழக்குகள் குறைக்கப்பட்ட பிறகு 2023 ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் வழக்குகளின் எண்ணிக்கை சுமார் 25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரித்த போதிலும், திவால் செயல்முறைக்கு அனுமதிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய காலாண்டுகளை விடத் தொடர்ந்து குறைவாகவே உள்ளது.
6,200 வழக்குகள்
டிசம்பர் 2022 வரை 6,200 வழக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 2,692 நிதிக் கடன் வழங்குபவர்களாலும் (financial creditors), 3,133 செயல்பாட்டுக் கடனாளிகளாலும் (operational creditors) தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில் கார்ப்பரேட் கடனாளிகளின் பங்கு தொடர்ந்து சிறிதளவாகவே உள்ளது.
துறை வாரியான பாதிப்பு
இந்த நிலையில் துறை வாரியாகப் பார்க்கும் போது உற்பத்தி துறையைப் பார்க்கும் போது அதிகப் பங்கீட்டை வைத்துள்ளது. சுமார் 39 சதவீத தொகை உற்பத்தி துறை சார்ந்த நிறுவனங்கள், அமைப்புகள் கொடுக்கப்பட்ட கடன்களில் மீட்க முடியாமல் உள்ளது. இதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் துறை 21 சதவீதம், கட்டுமானம் 11 சதவீதம், வர்த்தகத் துறை 10 சதவீதம்.
தீர்வுகள், விசாரணை
டிசம்பர் 2022 ஆம் ஆண்டில் 6199 வழக்கில் 10 சதவீதம் வழக்குகள் தீர்வுகளை எட்டியுள்ளது, இதேபோல் 32 சதவீதம் நடைமுறையில் விசாரணையில் உள்ளது, இது 35 சதவீதத்தில் இருந்து 32 சதவீதமாகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications