பொதுத்துறை வங்கிகளில் நாளுக்கு நாள் வாராக் கடன் அதிகரித்து வரும் நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில் பொதுத்துறை வங்கியின் சுமையைக் குறைக்கப் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் மிகவும் முக்கியமானது இரண்டு பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கத் திட்டமிட்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார்.
வங்கி தனியார்மயமாக்கல்-ஐ எதிர்த்து இந்தியாவின் 9 வங்கி ஊழியர்கள் அமைப்புகளின் தலைமை அமைப்பான யுனைடெட் போரம் ஆ பேங்க் யூனியன்ஸ் (UFBU) அமைப்பு நாடு முழுவதும் இருக்கும் பொதுத்துறை வங்கிகளை 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முக்கியப் பட்ஜெட் அறிவிப்பு
பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்குச் சேவையான நிதியைத் திரட்டும் நோக்கில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யும் திட்டத்தில் 2020ல் மாபெரும் தோல்வியை மத்திய அரசு அடைந்த நிலையில், 2022ஆம் நிதியாண்டில் திட்டமிட்டபடி 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை அரசு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள்
இந்த இலக்கை அடைய முதலும் முக்கியமாக இரண்டு பொதுத்துறை வங்கிகளையும், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப் போவதாகப் பட்ஜெட் அறிக்கையிலேயே அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வங்கி பங்கு முதலீட்டாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு பெற்றாலும், வங்கி ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவுகிறது.
2 நாள் போராட்டம்
மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து United Forum of Bank Unions (UFBU) அமைப்பு நாடு முழுவதும் இருக்கும் பொதுத்துறை வங்கி ஊழியர்களை மார்ச் 15 மற்றும் 16ஆம் தேதி இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. வங்கிகள் ஊழியர்கள் போராட்டத்தின் மூலம் மத்திய அரசு தனது முடிவில் இருந்து பின்வாங்குமா..?
இந்திய வங்கித்துறை
இந்திய வங்கித்துறையை மேம்படுத்த வேண்டும் என மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக ஐடிபிஐ வங்கி பங்குகளை 2019ஆம் ஆண்டு எல்ஐசி-க்கு விற்பனை செய்தது. 14 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக இணைத்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications