வங்கி சேவைகளில் பெரும்பாலும் டிஜிட்டல் மற்றும் ஆன்லைன் சேவைகளாக மாறிய நிலையில் வங்கிகளின் தேவை மக்கள் மத்தியில் பெரும்பாலும் குறைந்த நிலையிலும், சில முக்கியமான சேவைகளுக்கு வங்கிகளுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தாலேயே இன்றளவும் பல வங்கிகள் தனது கிளைகளை அதிகரித்து வருகின்றன.
ஏற்கனவே வங்கிகள் வாரத்தில் இரு சனிக்கிழமை மூடப்பட்டு இருக்கும் நிலையில், பொது விடுமுறை இதற்கிடையில் வந்தால் கூடுதலான நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும்.
இந்நிலையில் ஜூலை மாதம் வங்கிகளுக்குச் சுமார் 14 நாட்கள் இயங்காது என ஆர்பிஐ தரவுகள் கூறுகிறது. ஆனால் இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடும் என்பதால், தமிழ்நாட்டில் எத்தனை நாள் மூடப்பட்டு இருக்கும்..? எப்போது மூடப்பட்டு இருக்கும்..? என்பதை இப்போது பார்ப்போம்.
14 நாட்கள் விடுமுறை
ஜூலை மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இருப்பினும், இந்த மாதத்தில் சில வங்கி விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும்.
ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி விடுமுறைகளை மூன்று பிரிவுகளின் கீழ் பிரிக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கும், பிராந்தியத்திற்கும் விடுமுறை நாட்கள் மாறுபடுவது இயல்பான ஒன்று. இதன் வாயிலாகவே இந்தியா முழுவதும் இருக்கும் வங்கிகள் மொத்தமாக இயங்காத நாட்களாக ஜூலை மாதம் 14 நாட்கள் உள்ளன.
விடுமுறை நாட்கள்
ஜூலை 1 (ரதா / காங் யாத்ரா): புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 3 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 7 (கார்ச்சி பூஜை): அகர்தலாவில் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 9 (இரண்டாவது சனி, பக்ரீத்): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது, இரண்டாவது சனிக்கிழமை தவிர, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கேரளாவின் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 10 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 11 (ஈத்-உல்-அதா): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது
ஜூலை 13 (பானு ஜெயந்தி): காங்டாக்கில் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 14 (Beh Dienkhlam): ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 16 (ஹரேலா): டேராடூனில் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 17 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 23 (நான்காவது சனிக்கிழமை): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 24 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 26 (கேர் பூஜை): அகர்தலாவில் வங்கிகள் மூடப்படுகிறது.
ஜூலை 31 (ஞாயிறு): நாடு முழுவதும் வங்கிகள் மூடப்படுகிறது.
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் ஜூலை மாதம் மட்டும் 2வது, 4வது சனிக்கிழமை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை. இதனால் தமிழ்நாட்டில் வங்கி சேவைகளில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications