இந்தியாவில் கிரிப்டோகரன்சி மீது முதலீடு செய்வோர் சில மாதங்கள் முன்பு வரையில் எப்போது இந்திய அரசு இதைத் தடை செய்யும் எனப் பயந்துக் கொண்டு இருந்த நிலையில் மத்திய அரசு கிரிப்டோவை தடை செய்யாமல் ஒழுங்கு முறைப்படுத்தத் திட்டமிட்டு உள்ளோம் என அறிவித்தது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி அளித்தது.
இந்நிலையில் பட்ஜெட் அறிவிப்பில் கூடக் கிரிப்டோ முதலீட்டின் மீது 30 சதவீதம் வரி விதிக்கும் போது முதலீட்டாளர்கள் தடை செய்யாமல் வரி விதித்தது மகிழ்ச்சியுடனே ஏற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் உயர் அதிகாரி இந்தியாவில் கிரிப்டோகரன்சி-யை தடை செய்வது மேல் எனக் குறிப்பிட்டு உள்ளார்.
டி ரபி சங்கர்
இந்தியாவில் டிஜிட்டல் கரன்சியை உருவாக்கும் முக்கியமான பணியைச் செய்து வரும் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி ரபி சங்கர் கிரிப்டோகரன்சி குறித்து வெளியிட்ட கருத்து தான் தற்போது இந்தியாவின் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது. குறிப்பாகக் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தடை செய்வது சிறந்தது
பிப்ரவரி 14 ஆம் தேதி இந்திய வங்கிகள் சங்கத்தின் 17வது ஆண்டின் வங்கி தொழில்நுட்ப மாநாடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி ரபி சங்கர் இந்தியாவில் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வது சிறந்த முடிவாக இருக்கும் எனப் பேசியுள்ளார்.
கிரிப்டோகரன்சி ஒழுங்குமுறை
இந்தியாவில் கிரிப்டோகரன்சியை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்று பலர் தங்கள் கருத்தை முன்வைத்த நிலையில், அக்கருத்துக்களை ஆய்வு செய்த போது, அவற்றில் எதுவுமே அடிப்படை முதலீட்டுக்கு ஆதாரமாக நிற்கவில்லை" என்று டி ரபி சங்கர் கூறினார்.
ப்ரைவேட் கிரிப்டோகரன்சி
சமீபத்தில் கூட ரிசர்வ் வங்கி கவர்னர் ப்ரைவேட் கிரிப்டோகரன்சிகள் நாட்டின் வளர்ச்சிக்காக, பணவீக்கம், நிதி நிலை நிலைதன்மை மேம்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி எடுக்கும் முயற்சிகள் கெடுக்கிறது எனச் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கிரிப்டோகரன்சி மசோதா
இந்தியாவில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் வேளையில் மத்திய அரசு ஒழுங்குமுறைக்கு ஆதரவு அளிக்கும் இதேவேளையில் ரிசர்வ் வங்கி கவர்னர் கிரிப்டோகரன்சியைத் தடை செய்வது குறித்து முதல் முறையாக வெளிப்படையாகப் பேசியுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications