மும்பை: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் மக்களை பாடாய்படுத்தி வரும் நிலையில், ஈடுகட்ட முடியாத அளவில் இழப்பீடுகளை ஏற்படுத்தி வருகின்றது.
இதற்கிடையில் பொருளாதாரம் மீண்டும் பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. பல ஆய்வு நிறுவனங்களும் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறித்தான கணிப்புகளை திருத்தி வருகின்றன.
அந்த வகையில் பார்க்லேஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டிற்கான ஜிடிபி விகிதத்தினை 9.2% ஆக குறைத்துள்ளது.
பொருளாதார சரிவு
இந்தியாவில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில், தற்போது கருப்பூஞ்சை தொற்றும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கொரோனாவுக்கான தடுப்பூசிகளே இன்னும் முழுமையாக போட்டு முடிக்கப்படவில்லை. இதுவே மந்த நிலையில் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பொருளாதாரம் கொரோனாவை விட மிக வேகமாக சரிவினைக் கண்டு வருகின்றது.
கடுமையான லாக்டவுன்
கடந்த முறை போன்று இந்த முறையும் நாடு தழுவிய முழு லாக்டவுன் இல்லையென்றாலும், பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் தான் பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் முந்தைய ஜிடிபி கணிப்பு விகிதங்களை குறைத்து வருகின்றன. பார்கிலேஸ் நிறுவனம் முன்னதாக நடப்பு நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 11% ஆக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், அதனை 10% ஆக குறைத்தது. அதனை தற்போது 80 அடிப்படை புள்ளிகள் குறைத்து 9.2% மாற்றியமைத்துள்ளது.
பல காரணிகள்
இது பெருகி வரும் கொரோனா தாக்கம், மந்தமான தடுப்பூசி நடைமுறைகள் உள்ளிட்ட பலவற்றையும் கருத்தில், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்தியா மூன்றாவது கட்ட கொரோனா பரவலை சந்தித்தால், அது இன்னும் நிலைமையை மோசமாக்க கூடும். இது பொருளாதாரத்தில் இன்னும் வீழ்ச்சியைக சந்திக்க கூடும். இதனால் ஜிடிபி விகிதம் இன்னும் குறையக்கூடும். அப்படி மூன்றாவது அலை பாதித்தால் ஜிடிபி விகிதமானது 7.7% ஆக குறையலாம் என்றும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வழக்குகள் குறையலாம்
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது. இது கடுமையான கட்டுப்பாடுகளுக்கும் மத்தியில் வந்துள்ளது. குறிப்பாக ஹாட்ஸ்பாட்டாக இருந்தா மகராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் குறையத் தொடங்கியுள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இதனால் ஜூன் மாத இறுதிக்குள் புதிய வழக்குகள் எண்ணிக்கையானது கணிசமாக குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications