ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்ததை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) மகளிர் அணிக்கு ரூ.51 கோடி ரொக்கப் பரிசை அறிவித்துள்ளது.
மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியதன் மூலம், கடந்த 2005 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தோல்விகள் உட்பட பல தசாப்தங்களாக தொடர்ந்த உலகக் கோப்பை கனவு நனவானது. இதன் மூலம் இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற வரலாற்றுச் சாதனை குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா, "இது மகளிர் கிரிக்கெட்டில் ஒரு திருப்புமுனை என தெரிவித்தார். மேலும், இந்த வெற்றியை 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியின் உலகக் கோப்பை வெற்றிக்கு இணையானதாக ஒப்பிட்டு பேசினார்.
1983இல் கபில் தேவ் இந்தியாவை உலகக் கோப்பையை வெல்ல வைத்து கிரிக்கெட்டில் ஒரு புதிய சகாப்தத்தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தினார். அதே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் இன்று நமது மகளிர் அணி கொண்டு வந்துள்ளது. ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அவரது அணி இன்று கோப்பையை வென்றதுடன் மட்டுமல்லாமல், அனைத்து இந்தியர்களின் இதயங்களையும் வென்றுள்ளனர்.
அடுத்த தலைமுறை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு அவர்கள் மிகச் சிறந்த ஒரு பாதையை அமைத்துக் கொடுத்துள்ளனர். எங்கள் அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தபோதே மகளிர் கிரிக்கெட் அடுத்த கட்டத்தை எட்டியது என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மேலும், இந்திய கிரிக்கெட் வாரியத்திம் செயலாளராக ஜெய ஷா, (2019 முதல் 2024 வரை) பொறுப்பேற்றதில் இருந்து, மகளிர் கிரிக்கெட்டில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். வீரர்களுக்கு ஊதிய சமத்துவமும் (Pay Parity) சரிசெய்யப்பட்டது. கடந்த மாதம், ஐசிசி தலைவராக இருந்த ஜெய் ஷா, மகளிர் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை 300 சதவீதம் அதிகரித்தார்.
முன்னர் 2.88 மில்லியன் டாலராக இருந்த பரிசுத் தொகை, தற்போது 14 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் அனைத்தும் மகளிர் கிரிக்கெட்டை பெரிதும் ஊக்குவித்துள்ளன. மேலும், இந்தச் சாதனையைப் பாராட்டி, பிசிசிஐ-யும் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் அடங்கிய முழு அணிக்கும் ரூ.51 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசுத் தொகையான ரூ.51 கோடி, அணியின் அனைத்து வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட உள்ளது. இது தவிர, உலகக் கோப்பையை வென்ற அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வழங்கும் சுமார் ரூ.40 கோடி பரிசுத் தொகையையும் இந்திய அணி பெறுகிறது.
More From GoodReturns

T20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: முகேஷ் அம்பானிக்கு கிடைத்த அட்சய பாத்திரம்!! ஒவ்வொரு நொடிக்கும் காசு!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications