சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதற்கான ஓட்டுனர் இல்லாத ரயில்களை தயாரித்து வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பாக ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
இதில் பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்ற நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய பிஇஎம்எல் (BEML) லிமிடெட் நிறுவனம் குறைந்த விலைக்கு ஒப்பந்தம் கோரி இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மூன்று காரிடார்கள் இருக்கின்றன . இந்த திட்டத்தின் மதிப்பீடு 63, 246 கோடி ரூபாய் ஆகும். இந்த திட்டத்திற்காக ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முதல் ஒப்பந்தம் கோரப்பட்டு Alstom நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
இந்த நிறுவனம் முதல் ஓட்டுனர் இல்லா ரயிலை கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. தற்போது இந்த ரயிலானது மெட்ரோ ரயில் நிர்வாகத்தால் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டாவது ஒப்பந்தம் கோரும் பணி தற்போது நடைபெற்றது.
மாதவரம் முதல் சிப்காட் வரையிலான மூன்றாவது காரிடார் மற்றும் மாதவரம் முதல் சோளிங்கநல்லூர் வரையிலான ஐந்தாவது காரிடார் ஆகிய இரண்டு காரிடார்களிலும் இயங்கும் வகையில் ரயில்களை தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது.
இதில் BEML நிறுவனம் தான் குறைந்த தொகைக்கு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதற்கான ஆவணங்கள் மேலும் சில ஒப்புதல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடிய விரைவில் BEML நிறுவனத்திற்கு இதற்கான ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மாத இறுதிக்குள்ளேயே ஒப்பந்தம் வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதன் கீழ் BEML நிறுவனம் 210 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 3, 600 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
இந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் பெங்களூருவில் தயாரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த முதலாவதாக வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 108 ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன. தற்போது இரண்டாவது ஒப்பந்தமும் வழங்கப்படுகிறது.
ஓட்டுநர் இல்லாத ரயில்கள் என்பதால் இது பயன்பாட்டுக்கு வரும் தொடக்க காலத்தில் roving attendants பணியில் இருப்பார்கள் என சொல்லப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு 90 கிமீ வேகத்தில் இந்த ரயில்கள் இயங்கும் என்றும் ஒருமுறை ஆயிரம் பேர் வரை அழைத்து சென்று செல்லக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications