சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளில் 210 ரயில் பெட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை BEML நிறுவனம் பெற்றுள்ளது .சென்னையில் இரண்டாம் கட்டமாக 116 கிலோ மீட்டர் நீளத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டது. இந்த ஒப்பந்த புள்ளியில் BEML நிறுவனம் குறைந்த அளவிலான தொகையை குறிப்பிட்டு ஒப்பந்தத்தை பெற்றுள்ளத. இதன்படி இந்த நிறுவனம் 210 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க இருக்கிறது. இந்த புதிய ரயில் பெட்டிகள் மாதவரம் - சிறுசேரி சிப்காட் மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையிலான ரயில் பாதையில் பயன்படுத்தப்படும் என தெரிகிறது .

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக லைன் 3இல் மாதவரம் முதல் சிறுசேரி வரை 45.4 கிலோ மீட்டருக்கும், லைன் 5இல் 44.6 கிலோமீட்டர் தொலைவிற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்த புள்ளிகளை கோரியது. ஜூலை 2021 முதல் மே 2022 வரையில் இந்த ஒப்பந்த புள்ளி கோரும் பணிகள் நடைபெற்றன. ஆனால் ஜூன் 2022இல் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்பந்தங்களை ரத்து செய்தது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்த புள்ளிகள் குறித்து அறிவிப்பினை மீண்டும் வெளியிட்டது. இதற்கான தொழில் நுட்ப ரீதியான ஒப்பந்தம் கடந்த மே மாதத்துடன் முடிவடைந்தது. இதன்படி BEML மற்றும் டிட்டாகர் ரயில் சிஸ்டம் ஆகிய நிறுவனங்கள் 21.84 வருட காலம் கொண்ட ஒப்பந்தங்களை கோரி இருந்தது . இதில் 15 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பராமரிப்பும் அடங்கும்.
BEML நிறுவனம் ஒரு பெட்டிக்கு 14.7 கோடி ரூபாய் என்ற அளவில் ஒப்பந்த புள்ளி கோரியதாகவும் டிட்டாகர் ரயில் சிஸ்டம் நிறுவனம் 15.6 கோடி ரூபாய் என ஒரு பெட்டிக்கு ஒப்பந்தம் கோரியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் குறைந்தபட்சமாக கோரிய BEML நிறுவனத்திற்கு தான் ரயில் பெட்டிகளுக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன்படி BEML நிறுவனம் இந்த இரண்டு புதிய பாதைகளிலும் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் பெட்டிகளை வடிவமைப்பது, தயாரிப்பது ,சோதனை செய்வது, மேலும் இதனை இயக்கும் ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பது, இந்த பெட்டிகளை அடுத்த 15 ஆண்டு காலத்திற்கு பராமரிப்பது ஆகிய அனைத்திற்கும் பொறுப்பாகும்.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications