இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரமாக பெங்களூரு திகழ்கிறது. பெங்களூருக்கு ஏற்கனவே கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமானம் 2030ஆம் ஆண்டுக்குள் தன்னுடைய பயணிகள் கையாளும் திறனை எட்டிவிடும் என கணிக்கப்படுகிறது. இதனால் பெங்களூருவுக்கு இரண்டாவதாக ஒரு விமான நிலையம் வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
எனவே கர்நாடக மாநில அரசு பெங்களூரின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை கட்டமைப்பில் மிக தீவிரமாக இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் பெங்களூரு நகரத்தில் இருந்து மிக தூரமாக இருக்கிறது என தொடர்ச்சியாக மக்கள் புகார் கூறிய வண்ணம் இருக்கின்றனர். இந்தநிலையில் நகரில் இருந்து மக்கள் எளிமையாக அனுகும் வகையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதில் கர்நாடக அரசு தீர்க்கமாக இருக்கிறது.

கர்நாடக மாநில தொழில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் பெங்களூர் நகரில் இருந்து சற்று அருகிலேயே மூன்று இடங்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. சோமானஹள்ளி, சூடாஹள்ளி ஆகிய இரண்டு இடங்கள் தெற்கு பெங்களூருவில் உள்ளது, மூன்றாவதாக சிக்கசூலூர் இது மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த மூன்று பகுதிகளையும் இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இந்தப் பகுதியில் நில அமைப்பு எப்படி இருக்கிறது ,சுற்றுப்புறங்களில் இருக்கக்கூடிய விமான நிலையங்களுக்கும் இதற்கும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்திருக்கிறார்கள், தொழில்நுட்ப ரீதியிலான சில விளக்கங்களையும் கர்நாடக மாநில அரசிடம் கேட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் கர்நாடக மாநில அரசு மூன்று பகுதிகளிலும் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கு ஒப்பந்த புள்ளி கோரி இருக்கிறது. மூன்றிலிருந்து நான்கு நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பம் செய்திருப்பதாகவும் சில வாரங்களில் இந்த விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு விடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விரிவான ஆய்வறிக்கை விமான நிலையத்தை இந்த மூன்று இடங்களில் அமைக்க முடியுமா முடியாதா ,தொழில்நுட்ப ரீதியாக இது சாத்தியமா, எவ்வளவு இதற்கு செலவாகும் , எந்த மாதிரியான உள்கட்டமைப்பு இங்கே சாத்தியப்படும் என்பன உள்ளிட்ட விவரங்களை கொண்டிருக்கும். 2033 ஆம் ஆண்டுக்குள் புதிய விமான நிலையம் பயன்பாட்டுக்கு வந்து விட வேண்டும் என கர்நாடக மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது.
ஏற்கனவே ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு இடம் தேர்வு செய்து திட்ட அறிக்கையை அனுப்பியது ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்து விட்டது. எனவே மத்திய அரசுக்கு தொழில்நுட்ப ரீதியான சாத்திய கூறுகள் கொண்ட புதிய திட்ட அறிக்கையை அனுப்பும் பணிகளை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடக அரசும் பெங்களூருவின் 2ஆவது விமான நிலைய பணிகளை தொடங்கிவிட்டது.
More From GoodReturns

பெங்களூர் மாஸ்.. ரியல் எஸ்டேட்-ல் பணத்தை போட்டவர்களுக்கு ஜாக்பாட்.. 3 வருடத்தில் இப்படியா..?

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications

