ஓசூர்-க்கு போட்டியாக 3 மடங்கு பெரிய விமான நிலையத்தை அமைக்கும் கர்நாடகா.. அதுவும் இந்த இடத்தில்..?!

தென்னிந்தியாவின் விமான போக்குவரத்துத் துறைக்கு புதிய பரிமாண வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஓசூர், வடக்கு பெங்களூர், ஆந்திரா என பல இடத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு விமான நிலையம் எனில் அது ஓசூர் விமான நிலையம் தான்.

ஐடி நகரமான பெங்களூர் மற்றும் உற்பத்தி நகரமான ஓசூர் எல்லையில் அமைய உள்ள இப்புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு மிகப்பெரிய வளர்ச்சி பாதை இருப்பதாக கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில், இதற்கு போட்டியாக கர்நாடகா அரசு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

ஓசூர்-க்கு போட்டியாக 3 மடங்கு பெரிய விமான நிலையத்தை அமைக்கும் கர்நாடகா.. அதுவும் இந்த இடத்தில்..?!

கர்நாடகாவில் இரண்டாவது விமான நிலையம் உருவாக்கப்பட வேண்டும் என கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வந்தாலும், பெரிய அளவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஓசூரில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தது முதல் கர்நாடகா 2வது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் தீவிரம் காட்ட துவங்கியது.

இந்த நிலையில் கர்நாடகா தொழிற்துறை அமைச்சர் எம்பி பாட்டில் நெலமங்கலத்தில் (Nelamangala) இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். நெலமங்கலத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில், பெங்களூரு-மங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் 6,000 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது.

இந்த புதிய விமான நிலையம், தற்போதுள்ள பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தை விட 1.5 மடங்கு பெரியதாக இருக்கும். இதேபோல் ஓசூரின் 2000 ஏக்கர் விமான நிலையத்தை ஒப்பிடுகையில் 3 மடங்கு பெரியதாக இருக்கும் என தெரிகிறது.

தமிழ்நாட்டில் புதிய விமான நிலையம்: தமிழ்நாடு அரசு, ஓசூரில் புதிய விமான நிலையத்தை சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிட்டு உள்ளது. ஓசூரில் தற்போதுள்ள தனேஜா விமான நிலையம் அல்லது இதற்கு 2 கிலோமீட்டர் தெற்கில் இருந்து விமான நிலையம் அமைப்பதில் இறுதி முடிவை எடுக்க உள்ளது.

ஓசூர் விமான நிலையம் அமையவுள்ள இடம் தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தாலுகாக்களில் அமைந்துள்ளது. இதற்காக பெலகொண்டபள்ளி, கலுகொண்டபள்ளி, ஹோசபுரம், கோபனபள்ளி, முத்துகனபள்ளி, முகலூர், அச்செட்டிபள்ளி ஆகிய கிராமங்களில் இடத்தை கைகயகப்படுத்தப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+