வருடத்தின் 365 நாட்களும் இளம் தலைமுறையினர் வேலைவாய்ப்புகாகவும், பிஸ்னஸ் துவங்குவதற்காகவும் இந்தியாவின் முக்கிய தொழில்நகரமான பெங்களூர்-க்கு வந்துக்கொண்டு இருக்கின்றனர். பல பெங்களூரில் குடும்பத்துடன் வாழ திட்டமிட்டு வருகின்றனர், வொர்க் ப்ரம் ஹோம் முடிந்த பின்பு பெங்களூர் நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்துடன் பெங்களூர் வந்துள்ளனர்.
இப்படி பல காரணத்திற்காக பெங்களூர் வரும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் வாடகை வீட்டுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் மட்டும் பெங்களூரில் வீட்டு வாடகை 40 சதவீதம் அதிகரித்துள்ளது, மாத சம்பளக்காரர்கள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கடந்த 2 மாதத்தில் பெங்களூரில் மீண்டும் ஒரு ரவுண்ட் வாடகை உயர்ந்துள்ளது. அப்பார்ட்மென்ட் அல்லாத ஒரு தனி கட்டிடத்தில் 2BHK வீட்டின் வாடகை தற்போது பெங்களூரில் சராசரியாக 35,000 முதல் 38,000 ரூபாயில் கிடைக்கிறது. இது முன்பு 25,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே 2BHK வீடுகள் கேட்டெட் கம்யூனிட்டியில் இருந்தால் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக தொகைக்கு வாடகையாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் இது பெங்களூர் புறநகர் பகுதியில் 20000 முதல் 25000 ரூபாய்க்கு கிடைக்கிறது, முன்பு இது 12000 முதல் 15000 ரூபாயாக இருந்தது.
மேலும் பெங்களூரின் முக்கிய மற்றும் அதிகப்படியான ஐடி சேவை நிறுவனங்கள் இருக்கும் சர்ஜாபுரா, இந்திராநகர், HSR லேஅவுட் போன்ற நகரின் முக்கிய பகுதிகளில் உள்ள 3BHK பிளாட்களின் மாத வாடகை 80,000 ரூபாய்க்கு மேல்.
இதனால் புதிதாக வாடகை வீடுகளை தேடுவோர் பேகூர் அல்லது ஓசூர் சாலை போன்ற இடங்களைப் தேர்வு செய்கின்றனர். பல அப்பார்ட்மென்ட்களில் பழைய குடியிருப்பாளர்களுக்கம் வாடகை இன்றைய சந்தை நிலவரத்திற்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் வீட்டை காலி செய்யும் மனநிலையில் இருப்பது மட்டும் அல்லாமல் சொந்தமாக வீட்டை வாங்கும் முயற்சியில் உள்ளனர்.
பேகூர் அல்லது ஓசூர் சாலை போன்ற தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களில் அப்பார்ட்மென்ட் வாடகை பிற பகுதிகளை ஒப்பிடுகையில் 15,000 - 20,000 ரூபாய் வரையில் உள்ளது. இதுவும் அப்பார்ட்மென்ட் மற்றும் பகுதிக்கு ஏற்ப மாறுகிறது.
More From GoodReturns

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications