இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் செல்ல முடியாத காரணத்தால் பெங்களூரு பெருநகர அரசு பேருந்தில் திங்கள்கிழமை சென்றார்.
பெங்களூரில் தனியார் போக்குவரத்து அமைப்புகள் அனைத்தும் இன்று அரசின் சக்தி திட்டம் அதாவது பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினர். இதனால் ஆட்டோ, கேப், டாக்சி என எந்த விதமான தனியார் போக்குவரத்தும் இயங்கவில்லை.

இதனால் 52 வயதான முன்னாள் லெக் ஸ்பின்னர் அனில் கும்ப்ளே பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு காரில் செல்ல முடியாத காரணத்தால் அரசு பேருந்தில் சென்றுள்ளார். மேலும் அனில் கும்ப்ளே விமான நிலையத்திலிருந்து பேருந்தில் செல்லும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கும்ப்ளே விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு பெங்களூர் அரசு இயக்கும் ஏசி வோல்வோ பேருந்தை இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு பயணித்துள்ளார், இந்த தருணத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்ட நிலையில் அவருக்குப் பின்னால் சக பயணிகள் அமர்ந்திருந்ததையும் புகைப்படத்திலிருந்து பார்க்க முடிந்தது.
அனில் கும்ப்ளே சற்றும் யோசிக்காமல் மக்கள் பயணிக்கும் அரசு பேருந்தில் பயணித்ததை பலரும் பாராட்டினர் மற்றும் பொது போக்குவரத்தை ஆதரித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
அனில் கும்ப்ளே-வின் டிவிட்டர் போஸ்டை கர்நாடக மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தனது டிவிட்டரில் பழம்பெரும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ அனில் கும்ப்ளே அவர்கள் விமான நிலையத்திலிருந்து BMTC வால்வோ பஸ்ஸைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு முன்மாதிரியை அமைக்கிறது.
அனைவரும் அவரது வழியைப் பின்பற்றி பசுமையான மற்றும் நிலையான நகரத்திற்கு பொதுப் போக்குவரத்தை ஆதரிப்போம். BMTC பாதுகாப்பான, வசதியான மற்றும் மலிவு பயண அனுபவத்தை வழங்க உறுதி கொண்டு உள்ளது என தெரிவித்தார்.
இது ஒருபுறம் நடக்க இன்று பெங்களூரில் பல பகுதிகளில் போராட்டக்காரர்கள் ரோப்பிடோ டிரைவர்கள் மற்றும் கேப் டிரைவர்கள் தாக்கப்பட்டனர்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications