மெகா மோசடி நடக்குது, ஆனா யாருமே பேச மாட்டேங்கிறீங்க.. மிடில் கிளாஸ் மக்களின் கண்ணீர் கதை..!!

இந்தியாவின் நடுத்தர வர்க்கம் எப்போதும் நாட்டு வளர்ச்சியின் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர்கள் வேலை செய்கிறார்கள், வரி செலுத்துகிறார்கள், சேமிக்கிறார்கள், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள், சமுதாய வளர்ச்சியை நம்புகிறார்கள். ஆனால், இப்போது அவர்களின் வாழ்க்கை மெல்ல மெலிந்து கொண்டு இருக்கிறதா? அவர்கள் வாழ்வது போல் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அவர்கள் அடங்கி வாழ்கிறார்களா? என்பதைப் பற்றி பெங்களூரைச் சேர்ந்த நிதி தொழில்நுட்ப நிறுவனமான PeepalCo-வின் CEO அஷிஷ் சிங்கால் முக்கியமான கேள்வியை எழுப்புகிறார்.

அஷிஷ் சிங்கால் தனது LinkedIn பதிவில், இந்திய நடுத்தர வர்க்கம் இன்று கடுமையான நிதி அழுத்தத்தில் இருப்பதைப் பற்றி பகிர்ந்துள்ளார். இது ஒரு வீழ்ச்சி அல்ல. நன்றாக அலங்கரிக்கப்பட்ட ஒரு சரிவாகும் என அவர் குறிப்பிடுகிறார். இவர் இதனை மிகப்பெரிய மோசடி யாரும் பேசாதது என்றே கூறுகிறார்.

மெகா மோசடி நடக்குது, ஆனா யாருமே பேச மாட்டேங்கிறீங்க.. மிடில் கிளாஸ் மக்களின் கண்ணீர் கதை..!!

கடந்த 10 ஆண்டுகளில், ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை உள்ளவர்களின் வருமானம் ஆண்டு சராசரியாக வெறும் 0.4% மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. இதே நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை சுமார் 80% வரை உயர்ந்திருக்கிறது. பணவீக்கம் தொடர்ந்து உயரும் நிலையில், வாங்கும் சக்தி குறைந்து வருகிறது.

இன்றைய நடுத்தர வர்க்க குடும்பங்கள் விமானத்தில் விடுமுறைக்குச் செல்கின்றன, புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்குகின்றன, கார், வீடு போன்றவற்றிற்கு EMI கட்டுகின்றன. ஆனால், இந்த அழகான வெளிப்புறத்தின் பின்னால் இருக்கும் உண்மை வேதனையை சிங்கால் வெளிக் கொண்டு வருகிறார். சேமிப்புகள் குறைவு, மருத்துவ செலவுகள் தவிர்க்கப்படுவது, ஒவ்வொரு செலவுக்கும் கணக்கிட்டு வாழ்வது என்று கூறுகிறார்.

ஏழைகளுக்கு உதவி கிடைக்கிறது; பணக்காரர்கள் வளர்கிறார்கள்; நடுத்தரர்கள் சுமையையே தாங்குகிறார்கள். அஷிஷ் சிங்கால் தனது பதிவில் இந்த வரிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சொல்வது போல, ஏழை மக்களுக்கு அரசாங்க திட்டங்கள் உள்ளன. பணக்காரர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் நடுத்தர மக்கள் வருமானம் வளராத நிலையில், கண்ணியமாக வாழ பலரும் போராடுகிறார்கள்.

இந்த நெருக்கடி வெறும் பண ஓட்டத்தின் பற்றாக்குறை இல்லை. இது ஒரு அடையாளக் குறைபாடும் கூட. இந்தியாவின் வருமான வரி வசூலின் பெரும்பாலான பங்கை நடுத்தர மக்கள் தருகிறார்கள். ஆனால் அவர்கள் சவால்கள் திட்டமிடல்களிலும், அரசியல் உரைகளிலும் இடம் பெறவில்லை. தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு பகுதியான செயற்கை நுண்ணறிவு (AI), இப்போது வெள்ளை காலர் வேலைகளில் நுழையத் தொடங்கியுள்ளது. இதுவே இனி நடுத்தர வர்க்கத்திற்கு ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடும்.

2021-ல் இந்தியாவின் நடுத்தர வர்க்கம் சுமார் 31% ஆக இருந்தது. இது 2031-க்குள் 38% ஆகவும், 2047-க்குள் 60% ஆகவும் வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை வளர்ச்சி நடுத்தர மக்களின் நிதி பாதுகாப்பையும், உயர்நிலை வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் நடப்பது என்ன? சம்பள வளர்ச்சி இல்லாத நிலை - 0.4% எனும் மிகக் குறைந்த வளர்ச்சி. உணவுப் பொருள் விலை ஏற்றம் - 80% வரை உயர்வு. வாழ்க்கைச் செலவுகள் - வீடு வாடகை, மருத்துவ செலவுகள், கல்வி கட்டணங்கள், அனைத்தும் அதிகரிப்பு. EMI அடிமைத்தனம் - வீடு, கார், கல்வி, அன்றாட தேவைகளுக்குத் தேவையான கடன்கள். சேமிப்பு இல்லாத நிலை - வீடியோ ஸ்ட்ரீமிங், ஃபாஷன், புதிய மொபைல், பைனான்ஸ் சாப்ட்வேர் - செலவுகள் அதிகம், சேமிப்பு இல்லை. ஆரோக்கியம் - மருத்துவ செலவுகள், காப்பீடு இல்லாத நிலை, தள்ளிப் போடப்படும் சிகிச்சைகள். கடன் அடிமை வாழ்க்கை - கிரெடிட் கார்டு செலவுகள், பாக்கிகள் உயர்வு.

மெகா மோசடி நடக்குது, ஆனா யாருமே பேச மாட்டேங்கிறீங்க.. மிடில் கிளாஸ் மக்களின் கண்ணீர் கதை..!!

நடுத்தர மக்கள் சமுதாயத்தின் நிதி மூலதனமாக இருக்கிறார்கள். ஆனால், அரசியல் கவனமும், கொள்கை மாற்றங்களும் பெரும்பாலும் ஏழைகளுக்கான நலத் திட்டங்களுக்கும், தொழில் வளர்ச்சி குறியீடுகளுக்கும் மட்டுமே மையமாக இருக்கின்றன. நடுத்தர வர்க்கத்தின் வலியை விவாதிக்க யாரும் முன்வரவில்லை.

நமது நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த நடுத்தர வர்க்கம் நிலையாக இருக்க வேண்டும். அவர்கள் குரலுக்கு செவி சாய்க்கும் நேரம் இது. இல்லையேல், இந்த அழகாக அலங்கரிக்கப்பட்ட வீழ்ச்சி, ஒரு நாள் மிகப் பெரிய சமூக நெருக்கடியாக மாறக்கூடும்.

FAQs
அரசாங்கம் நடுத்தர மக்களுக்கு போதுமான உதவிகள் தருகிறதா?

இல்லை, அரசாங்கம் ஏழை மக்களுக்கு நலத் திட்டங்கள் வழங்குகிறது, ஆனால் நடுத்தர மக்களுக்கு சிறந்த உதவி கிடைக்கவில்லை.

நடுத்தர மக்கள் எப்படி கடனில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள்?

வீடு, கார் போன்ற பொருட்களுக்கு ஈஎம்ஐ கட்டுதல் மற்றும் கிரெடிட் கார்டு கடன்கள் காரணமாக கடனில் இருக்கிறார்கள்.

உணவுப் பொருட்கள் விலை எப்படி உயர்ந்துள்ளது?

கடந்த 10 ஆண்டுகளில் உணவுப் பொருட்கள் விலை சுமார் 80% உயர்ந்துள்ளது.

நடுத்தர மக்களின் சம்பளம் எவ்வளவு உயர்ந்துள்ளது?

கடந்த 10 ஆண்டுகளில் நடுத்தர மக்களின் சம்பளம் வருடத்திற்கு சராசரியாக 0.4% மட்டுமே உயர்ந்துள்ளது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+