சென்னை: சென்னை மற்றும் பெங்களூருவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு - சென்னை கிரீன் ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்த எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான 262 கிலோமீட்டர் தொலைவை 2.15 மணி நேரங்களிலேயே கடந்து விடலாம். பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் முக்கியமான ஒரு எக்ஸ்பிரஸ்வே திட்டமாக இது பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் போக்குவரத்துக்கான நேரம் குறைவதோடு மட்டுமில்லாமல் சரக்கு போக்குவரத்து மிகவும் எளிதாகிவிடும். பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தென் மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வரக்கூடிய முதல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான பயண நேரம் வெறும் 2.15 மணி நேரங்களாக குறைந்து விடும். அதேபோல இந்த எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம்.
மிகவும் பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு எக்ஸ்பிரஸ்வேயாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் சென்னை பெங்களூர் இண்டஸ்ட்ரியல் காரிடார் வளர்ச்சி பெறும் என்றும், இந்த பகுதிகளில் உற்பத்தி துறை ஆனது வேகமாக வளர்ச்சி காணும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வேயில் லாரிகள் செல்வதற்கு என தனி பாதை, வாகனங்கள் மற்றும் விலங்குகள் பாதசாரிகள் செல்வதற்கு என தனி பாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த எக்ஸ்பிரஸ்வேயானது சென்னையில் தொடங்கி ஆந்திரப் பிரதேச மாநிலம் வழியாக பெங்களூருக்கு சென்றடைகிறது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வேயானது அமைக்கப்பட்டுள்ளது சென்னை ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, சித்தூர் பங்காரு பள்ளம், பலமனேர் , பங்கார பேட் கோலார் தங்க சுரங்கம், மாலூர் ஆகிய நகரங்களையும் இது இணைக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 18,000 கோடி ரூபாய் செலவில் இந்த எக்ஸ்பிரஸ்வேயை கட்டமைத்து வருகிறது. அடுத்த மாதம் இங்கே வாகன சோதனை ஓட்டம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.
story written by: Devika
More From GoodReturns

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications