சென்னை டூ பெங்களூர் இனி 2.15 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.. எக்ஸ்பிரஸ்வே-ல் வந்தது செம அப்டேட்..!

சென்னை: சென்னை மற்றும் பெங்களூருவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரு - சென்னை கிரீன் ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே நடப்பு ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 சென்னை டூ பெங்களூர் இனி 2.15 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.. எக்ஸ்பிரஸ்வே-ல் வந்தது செம அப்டேட்..!

இந்த எக்ஸ்பிரஸ்வே பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னை மற்றும் பெங்களூரு இடையிலான 262 கிலோமீட்டர் தொலைவை 2.15 மணி நேரங்களிலேயே கடந்து விடலாம். பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான இந்த எக்ஸ்பிரஸ்வே மூன்று மாநிலங்களை இணைக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. பாரத்மாலா பாரியோஜனா திட்டத்தின் கீழ் முக்கியமான ஒரு எக்ஸ்பிரஸ்வே திட்டமாக இது பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் போக்குவரத்துக்கான நேரம் குறைவதோடு மட்டுமில்லாமல் சரக்கு போக்குவரத்து மிகவும் எளிதாகிவிடும். பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தென் மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் செயல்படுத்தி வரக்கூடிய முதல் எக்ஸ்பிரஸ்வே திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் பெங்களூரு மற்றும் சென்னை இடையிலான பயண நேரம் வெறும் 2.15 மணி நேரங்களாக குறைந்து விடும். அதேபோல இந்த எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யலாம்.

மிகவும் பாதுகாப்பான மற்றும் போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு எக்ஸ்பிரஸ்வேயாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன் மூலம் சென்னை பெங்களூர் இண்டஸ்ட்ரியல் காரிடார் வளர்ச்சி பெறும் என்றும், இந்த பகுதிகளில் உற்பத்தி துறை ஆனது வேகமாக வளர்ச்சி காணும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்த எக்ஸ்பிரஸ்வேயில் லாரிகள் செல்வதற்கு என தனி பாதை, வாகனங்கள் மற்றும் விலங்குகள் பாதசாரிகள் செல்வதற்கு என தனி பாதை உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த எக்ஸ்பிரஸ்வேயானது சென்னையில் தொடங்கி ஆந்திரப் பிரதேச மாநிலம் வழியாக பெங்களூருக்கு சென்றடைகிறது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் வகையில் இந்த எக்ஸ்பிரஸ்வேயானது அமைக்கப்பட்டுள்ளது சென்னை ஸ்ரீபெரும்புதூர், ராணிப்பேட்டை, சித்தூர் பங்காரு பள்ளம், பலமனேர் , பங்கார பேட் கோலார் தங்க சுரங்கம், மாலூர் ஆகிய நகரங்களையும் இது இணைக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் 18,000 கோடி ரூபாய் செலவில் இந்த எக்ஸ்பிரஸ்வேயை கட்டமைத்து வருகிறது. அடுத்த மாதம் இங்கே வாகன சோதனை ஓட்டம் நடைபெறும் என சொல்லப்படுகிறது.

story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+