இந்தியாவின் முன்னணி பைக் டாக்சி சேவை நிறுவனமான ரேபிடோ பல எதிர்ப்புகள் மத்தியிலும் தொடர்ந்து தனது சேவைகளை விரிவாக்கம் செய்து வரும் வேளையில், இந்தியாவின் டெக் நகரமாக விளங்கும் பெங்களூரில் அதிகப்படியான மக்கள் ரேபிடோ சேவையைப் பயன்படுத்தும் வேளையில் அவ்வப்போது ஏதாவது ஒரு சம்பவம் நடக்கும். இதில் சில நெகிழ்வான சம்பவமும் நடக்கும் வேளையில், ஸ்ருதி என்ற பெண் எதிர்கொண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பெங்களூர் மக்கள் அவ்வப்போது தாங்கள் எதிர்கொள்ளும் வித்தியாசமான கேப் அல்லது டாக்சி பயணத்தைச் சமூகவலைத்தளத்தில் பதிவிடுவது இயல்பு, பிற நகரத்து மக்களும் தங்களது வித்தியாசமான பயண அனுபவத்தைப் பதிவிட்டாலும் எண்ணிக்கையில் பெங்களூர் மக்கள் சற்று அதிகமாக பதிவிடும் வேளையில், ஸ்ருதி என்பவரின் பயணமும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

ஸ்ருதி பாஸ்வா என்ற ஒரு கல்லூரி மாணவி ரேபிடோ டாக்சியைப் புக் செய்துள்ளார், வழக்கமாகப் புக் செய்வது போல் இந்த முறையும் புக் செய்யும் போது, இவருடைய டிரைவராக வந்தது பெரிய நிறுவனத்தில் மேனேஜராகப் பணியாற்றும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றளவில் பல லட்சம் சம்பளம் வாங்கினாலும் பலர் ரேபிடோ, உபர் போன்ற சேவைகளில் தங்களை இணைத்துக்கொண்டு பணியாற்றுகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் நாட்டில் இதுபோன்ற நடப்பது இயல்பான ஒன்று, ஆனால் தற்போது இதே கலாச்சாரம் இந்தியாவிலும் பரவி வருகிறது. அப்படித் தான் இந்தச் சம்பவமும் நடந்துள்ளது.
இதுகுறித்து ஸ்ருதி பாஸ்வா தனது டிவிட்டரில், இது என்னுடைய பீக் பெங்களூர் மொமெண்ட், இன்று என்னைப் பிக்அப் செய்ய வந்த ரேபிடோ கேப்டன் ஒரு பெரிய நிறுவனத்தில் கார்ப்பரேட் மேனேஜர் ஆவார். மலிவான தொகையில் மக்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ட்ராப் செய்யும் பணியைச் செய்து வருகிறார். பெங்களூரில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இதுவும் உதாரணம் எனத் தெரிவித்தார்.
ஸ்ருதி பாஸ்வா தனது பதிவில் ரேபிடோ நிறுவனத்தை டேக் செய்துள்ள நிலையில், ரேபிடோ இவரது பதிவுக்கும், கேப்டன் குறித்து வார்த்தைகளுக்கு நன்றி கூறியுள்ளது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications