பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40% மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரு உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். புதிய நீர் விநியோகத்துக்கான உள்கட்டமைப்பு வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு இல்லை. நகரின் 1.3 கோடி குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நிலத்தடி நீர் மட்டுமே நம்பியிருக்கும் வேளையில் தற்போது பெரும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

நகரில் தோண்டப்பட்ட 13,900 ஆழ்துளைக் கிணறுகளில் 6,900 ஆழ்துளைக் கிணறுகள் 1,500 அடி ஆழத்திற்குத் தோண்டப்பட்ட போதிலும் வறண்டு விட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

பெங்களூர்: அடுத்த பத்தாண்டுக்குள் 40%  மக்களுக்கு தண்ணீர் கிடைக்காதாம்!

உலகெங்கிலும் உள்ள வானிலை பாதிக்கும் இயற்கையான நிகழ்வான எல் நினோ, சமீபத்திய ஆண்டுகளில் குறைந்த மழைப்பொழிவைப் பெறும் நகரம் "எதிர்பார்த்தபடி நிலத்தடி நீர்மட்டத்தை ரீசார்ஜ் செய்யவில்லை" என்று நிபுணர் பலூர் கூறினார்.

நகரத்திலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் காவிரி ஆற்றில் இருந்து புதிய குழாய் நீர் விநியோகமும் முடிக்கப்படவில்லை, இது நெருக்கடியை அதிகரிக்கிறது என்றார்.

மற்றொரு கவலை என்னவென்றால், நகரின் கிட்டத்தட்ட 90% பகுதியை காண்கிரீட்-ஆல் மூடப்பட்டு உள்ளது, இதனால் மழைநீர் நிலத்தில் இறங்குவதைத் தடுக்கிறது. இதனால் குறைந்த மழைநீரே நிலத்தில் சேமிக்கப்படுகிறது என்று பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி டி.வி.ராமச்சந்திரா கூறினார். கடந்த 50 ஆண்டுகளில் நகரம் கிட்டத்தட்ட 70% பசுமையை இழந்துவிட்டது, என்றார்.

2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் ஏற்பட்ட "டே ஜீரோ" தண்ணீர் நெருக்கடியுடன் நகரத்தின் தண்ணீர் பற்றாக்குறையை ராமச்சந்திரா ஒப்பிட்டார், அப்போது அந்த நகரம் வறட்சியின் காரணமாக பெரும்பாலான குழாய்களை அடைக்கும் அபாயகரமான நிலைக்கு வந்தது.

பெங்களூரு குடியிருப்புகளில் 40% க்கும் அதிகமானவர்களுக்கு அடுத்த பத்தாண்டுகளுக்குள் குடிநீர் கிடைக்காது என்று இந்திய அரசு 2018 இல் மதிப்பிட்டுள்ளது. பெங்களூருவுக்கு வெளியே உள்ள ஆறுகளில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் பெறுபவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து சப்ளை செய்யப்படுகிறது.

இப்போது, எல்லோரும் ஏரிகளின் இருக்கும் பகுதிகளில் போர்வெல் தோண்டுகிறார்கள், ஆனால் அது தீர்வு அல்ல என்று ராமச்சந்திரா கூறினார். அதற்கு பதிலாக, நகரம் முழுவதும் பரவியுள்ள 200க்கும் மேற்பட்ட ஏரிகளை நிரப்பவும், ஏரி பகுதிகளில் புதிய கட்டுமானங்களை நிறுத்தவும், மழைநீர் சேகரிப்பை ஊக்குவிக்கவும், நகரம் முழுவதும் பசுமையை அதிகரிக்கவும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். இதை செய்தால் தான் நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.

குடிநீருக்கு மற்ற ஆதாரங்களைக் கண்டறிந்து அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது நல்லது. எடுத்துக்காட்டாக, நகரத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை மறுபயன்பாடு செய்வதன் மூலம் "நன்னீர் தேவை குறைவதற்கு" உதவலாம் என்று பலூர் கூறினார்.

230 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட ஹவுசிங் சொசைட்டியில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் எஸ்.பிரசாத், தண்ணீர் விநியோகத்தை கடுமையான கட்டுப்பாடுகள் உடன் நிர்வாகம் செய்து வருகிறார். கடந்த வாரத்தில் இருந்து, தினமும் காலை 10 மணிக்குத் தொடங்கி, எட்டு மணி நேரம் மட்டுமே வீடுகளுக்கு நீர் விநியோக செய்யப்படும் என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளனர்.

இதனால் இந்த வீட்டில் குடியிருப்பவர்கள் தண்ணீரை குடத்தில் சேமிக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு தேவையான அனைத்தையும் ஒதுக்கப்பட்ட நேரத்தில் செய்ய வேண்டும். இதேபோல் அப்பார்ட்மென்ட்-களில் தண்ணீர் மீட்டர்கள் நிறுவவும் திட்டமிட்டுள்ளனர், ஏற்கனவே தண்ணீர் மீட்டர் உள்ள வீடுகளுக்கு அதிகப்படியான கட்டணத்தை வசூலிக்கவும் தயாராகியள்ளனர்.

Story Written by: I.Jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+