பெங்களூரில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மசால் தோசைக்கும், இட்லிக்கும், நெய் பொடி தோசைக்கும் அடிமையாக்கியிருக்கும் ராமேஸ்வரம் கஃபே 4 வருடத்திற்கு முன்பு பெங்களூரில் சிறிய அளவில் துவங்கி இன்று இந்நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் கஃபே உரிமையாளர்கள் தற்போது மிகப்பெரிய விரிவாக்க திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
ராமேஸ்வரம் கஃபே தற்போது பெங்களூரிலும், ஹைதராபாத்தில் மட்டுமே இயங்கி வரும் வேளையில் விரைவில் மும்பை, புனே, டெல்லி மற்றும் குஜராத் உள்ளிட்ட வட இந்திய மாநிலத்திலும் கால் பதிக்கவும், வேகமாக விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு உள்ளது.

இண்டர்நெட் வாயிலாகவும், மக்களின் வாயிலாகவும் குறுகிய காலத்தில் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ள ராமேஸ்வரம் கஃபே, அடுத்தடுத்து வளர்ச்சி திட்டத்தை வகுப்பது மட்டும் அல்லாமல் தனது பிராண்டு டிரெண்டிங் ஆக இருக்கும் போதே புதிய உச்சத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளது.
பெங்களூர் இந்திரா நகரில் புதிய கிளையைத் திறந்தபோது, ராமேஸ்வரம் கஃபே இணை நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திவ்யா ராகவேந்திர ராவ் தனது மாபெரும் விரிவாக்கத் திட்டம் குறித்து அறிவித்தார். இந்த புதிய கிளை இந்திரா நகர் பகுதியின் மிகவும் பிரபலமான 100 அடி சாலையில் அமைந்துள்ளது. 400 பேர் அமரக்கூடிய இடவசதியுடன் விரிவாக்கப்பட்ட மெனுவைக் கொண்டுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே வட இந்தியாவில் விரிவாக்கம் செய்வதோடு, ஹைதராபாத்தில் தனது கடை எண்ணிக்கையும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் ஹைதராபாத்தில் ஒன்று அல்லது இரண்டு புதிய கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளையில் கேரளா அல்லது தமிழ்நாடு சந்தைகளில் நுழைய எந்தத் திட்டமும் இல்லை என்பதையும் தெளிவுப்படுத்தியுள்ளது.
இதோடு நிற்காமல் ராமேஸ்வரம் கஃபே எல்லைகளை கடந்து அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் துபாயில் தனது முதல் சர்வதேச கிளையைத் திறக்க தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ராமேஸ்வரம் கஃபே பிராண்டின் மதிப்பு புதிய உச்சத்தை தொட உள்ளது. இது ராமேஸ்வரம் கஃபே வளர்ச்சி பாதையில் முக்கிய திருப்பமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரம் கஃபே தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிளையைத் திறக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications