இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் எனப்படும் GCC அலுவலகங்கள் அதிகமாக இருக்கும் முன்னணி நகரமாகப் பெங்களூர் இருந்தாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் இதன் பங்கு சற்று குறைந்து, அதன் ஆதிக்கம் குறையத் துவங்கியுள்ளது. 2018-19 இல் இந்திய அளவில் பெங்களூரின் GCC அலுவலகங்களின் பங்கீடு 33.8% இருந்த நிலையில் 2023-24 இல் 29.4% ஆக குறைந்துள்ளது.
பெங்களூரில் GCC அலுவலகங்களின் எண்ணிக்கை 2018-19 இல் 620-லிருந்து 2023-24 இல் 875 ஆக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தாலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இது இன்னும் அதிகமாக இருக்கிறது. இந்த காலகட்டத்தில் இந்தியா முழுவதும் GCC அலுவலகங்களின் மொத்த எண்ணிக்கை 62.5% அதிகரித்து, 1,830-லிருந்து 2,975 ஆக உயர்ந்துள்ளது.

சிறிய நகரங்கள் GCC-கள்: இந்தியாவில் முன்பெல்லாம் பெரு நகரங்களில் மட்டும் தான் GCC அலுவலகங்கள் அமைக்கப்படும், ஆனால் தற்போது GCC எகோசிஸ்டத்தில் பல காரணங்களால் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து Nasscom அமைப்பின் தலைமை மூலோபாய அதிகாரியான சங்கீதா குப்தா கூறுகையில் பெங்களூரு ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான முன்னணி நிறுவனங்களின் GCC அலுவலகங்கள் கொண்டிருப்பதால் தொடர்ந்து இப்பிரிவில் ஆதிக்கம் செய்து வருகிறது என்று கூறுகிறார்.
ஆனால் தற்போது ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களும், புதிய நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்தும்போது, செலவுகளைக் குறைக்கச் சிறிய நகரங்களில் அதாவது இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் அலுவலகங்களை நிறுவ விரும்புகிறது.
Zinnov-Nasscom இணையத்தில் வெளியிட்ட இந்தியா ஜிசிசி லேண்ட்ஸ்கேப் என்ற தலைப்பிலான அறிக்கையில், GCC நிறுவனங்கள் தற்போது நாட்டின் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் அலுவலகங்களை நிறுவுவதை முன்னிலைப்படுத்துகிறது. நாட்டின் மொத்த ஜிசிசி பங்கீட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களின் பங்கீடு 7% ஆக உள்ளன, 2019 இல் 5% இருந்தது.
பெங்களூரின் பங்கு குறைந்தாலும், NCR மற்றும் ஹைதராபாத் அதிகப்படியான ஜிசிசி அலுவலகங்களை ஈர்த்து வருகிறது. NCR-ன் ஜிசிசி அலுவலக பங்கீடு 2018-19 இல் 15.5சதவீதத்தில் இருந்து 2023-24 இல் 15.6% ஆக அதிகரித்துள்ளது. புனேவும் சிறிய உயர்வை அடைந்துள்ளது, 11.4சதவீதத்தில் இருந்து 12.1% ஆக உயர்ந்துள்ளது.
ஒரு காலத்தில் பெங்களூரின் நெருங்கிய போட்டியாளராக இருந்த ஹைதராபாத், தனது பங்கீட்டை 12% அளவில் தொடர்ந்து பராமரித்து வருகிறது. மும்பை 11.7சதவீதத்தில் இருந்து 12.2% ஆகவும், சென்னை 9.8சதவீதத்தில் இருந்து 10.2% ஆகவும் உயர்ந்துள்ளது.
பெரு நகரங்கள் அனைத்தும் கடந்த 5 வருடத்தில் சிறிய அளவிலேயே உயர்ந்துள்ளது, ஆனால் மொத்த வளர்ச்சியும் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை நகரங்களில் பதிவாகியுள்ளது என்பது தான் இதன் அடிநாதம். சிறு நகரங்களில் GCC நிறுவனங்களின் முதலீடுகளின் அளவு குறைவாக இருந்தாலும், எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்பதையும் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications