பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் வீட்டு வாடகைகளின் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில் இதற்கு ஐடி நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய இளைஞர்களே காரணம் என ரெடிட் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பதிவு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூர் நகரில் பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல இந்தியாவின் ஸ்டார்ட் தலைநகரமாகவும் இது இருக்கிறது. ஐடி ஊழியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெங்களூரு நகரில் வாடகை வீடுகளுக்கான தேவையும் வீடுகளின் வாடகையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது.

இந்த சூழலில் ரெட்டிட் தளத்தில் வெளியாகியுள்ள ஒரு பதிவில் பெங்களூரு நகரில் பணிபுரியும் இளம் டெக் தொழில் நிபுணர்கள் தான் வீடுகளின் வாடகை பல மடங்கு உயர்வதற்கு காரணம் என ஒரு பயனாளர் குறை கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு ரெடிட் தளத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
"பெங்களூருவில் தற்போது மிகப்பெரிய பிரச்சனை உருவாகி வருகிறது குறிப்பாக அதிக சம்பளத்தில் வேலைக்கு வந்திருக்கக்கூடிய இளம் தொழில் நிபுணர்கள் வீட்டு வாடகைகளின் மதிப்பை பல மடங்கு உயர்த்தி விட்டனர்" என அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
மாதத்திற்கு 1.5 லட்சம் முதல் 2.5 இலட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கக்கூடிய இளம் தொழில் நிபுணர்கள் 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரை வாடகை செலுத்துவதற்கு முன் வருகின்றனர். இதனால் பெங்களூரு வீட்டு உரிமையாளர்களும் வாடகைகளை பல மடங்கு உயர்த்தி விட்டனர் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சாதாரண சம்பளம் ஈட்ட கூடிய நபர்கள் பொருத்தமான வாடகைக்கு வீடு கிடைக்காமல் தவிக்கின்றனர் என அதில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூருவில் இதுதான் தற்போதைய நிலைமை என தங்களுடைய அனுபவங்களை பலரும் ரெடிட்டில் இந்த பதிவின் கீழ் தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் எலக்ட்ரானிக் சிட்டியில் நான் வேலை செய்கிறேன் இங்கே இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு வீட்டின் வாடகை 15 ஆயிரம் ரூபாய் அதுவே என்னுடன் பணிபுரியக்கூடிய மற்றொரு நபர் கோரமங்களாவில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டிற்கு 35 ஆயிரம் ரூபாய் வாடகை செலுத்துகிறார் என கூறியுள்ளார்.
இளம் தொழில் நிபுணர்கள் வீட்டு உரிமையாளர்கள் எவ்வளவு தொகையை வாடகையாக கூறினாலும் அதனை வழங்குவதற்கு தயாராக இருக்கின்றனர் அதுவே வாடகை உயர்வதற்கு பெருமளவில் காரணமாக இருக்கிறது என ஒரு பயனர் குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் கோரமங்களா, இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு படுக்கையறை கொண்ட வீட்டின் வாடகை சுமார் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications