பெங்களூர்: இந்தியாவில் புதிய "சிலிக்கான் வேலி" அமைப்போம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முக்கியமான திட்டத்தை முன்வைத்தார். இது பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் வேளையில், இதற்கு கர்நாடக மாநிலத்தின் வர்த்தகம், தொழில்துறை, உள்கட்டமைப்பு துறை அமைச்சர் MB பாட்டீல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரின் திட்டத்தை விமர்சனம் செய்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நாம் நமக்கு சொந்தமாக ஒரு சிலிக்கான் வேலியை உருவாக்க வேண்டும். இதற்காக தேசிய தொழில்துறை வழித்தடம் மேம்பாட்டு நிறுவனம் (NICDC) உடன் இணைந்து நாட்டின் தொழில்முனைவோர், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், இன்னோவேட்டார்ஸ் மற்றும் வழக்கத்தை மாற்றும் திறன் கொண்டு நிறுவனங்களான Disruptors-காக முழுமையான புதிய டெக் நகரத்தை 500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறினார்.

பியூஷ் கோயல் கருத்துக்குப் பதில் கூறும் வகையில் கர்நாடக அமைச்சர் MB பாட்டீல் "பெங்களூர் இந்தியாவிலேயே உள்ளது. இந்தியா என்பது நம் நாடு. நாம் நமக்குச் சொந்தமாக ஒரு சிலிக்கான் வேலியை உருவாக்க வேண்டும் என்று பேசியது ஏற்க முடியாது. பெங்களூர் ஒரு நாளில் கட்டப்படவில்லை; பல தசாப்தங்கள், நூற்றாண்டுகளாகக் கட்டப்பட்டது.
இரவோடு இரவாக சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை நீங்கள் கட்டலாம், ஆனால் ஒரு எகோசிஸ்டத்தை உருவாக பல தசாப்தங்கள் ஆகும். பெங்களூர் இந்தியாவின் அறிவு சுற்றுச்சூழலின் மையமாகும்" என்று அமைச்சர் எம்பி பாட்டீல் X தளத்தில் பதிவிட்டு உள்ளார்.
மேலும் எம்பி பாட்டீல், "கோயல் தனது அலுவலகத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி பெங்களூரை உலக நகரமாக மேம்படுத்த உதவ வேண்டும். மேலும் KHIR நகரத்தை உலகளாவிய இலக்காக மாற்ற உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
கர்நாடக அரசின் சிறப்புமிக்க திட்டமான அறிவு, சுகாதாரம், புதுமை மற்றும் ஆராய்ச்சி (KHIR) நகரம், பெங்களூரிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் உள்ள தாபஸ்பெட் மற்றும் தொடபள்ளாபுர் இடையே அமைக்கப்பட உள்ளது.
இந்த நகரத்தில் சுகாதாரம், புதுமை மற்றும் அறிவுத் துறைகளில் சுமார் ரூ.40,000 கோடி முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது 80,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு நகரத்தில் போக்குவரத்து, செமிகண்டக்டர் மற்றும் அட்வான்ஸ் மெட்டிரீயல்ஸ், விண்வெளி, பாதுகாப்பு மற்றும் விண்வெளி தொழில்நுட்பம், உயிரியல் அறிவியல் மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய முக்கிய துறைகளில் கவனம் செலுத்தும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

Tech Mahindra-வில் 30000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்..? வெளியான உண்மை.. ஆடிப்போன டெக் துறை..!

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications