இந்தியா முழுவதும் பெரும்பாலான ஐடி ஊழியர்கள் தற்போது கொரோனா தொற்றுப் பாதிப்பில் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர்.
ஆனால் இதே காலகட்டத்தில் பல ஐடி நிறுவனங்கள் பகுதி பகுதியாகத் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வருகிறது, இதனால் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்ற பலர் தற்போது பெரு நகரங்களுக்கு அதாவது வேலை செய்யும் இடத்திற்கு திரும்ப வந்துகொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு மட்டும் ஒரு ஸ்பெஷலான செய்தி வெளியாகியுள்ளது.
கர்நாடக அரசு
கர்நாடக அரசு தற்போது பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கப் பல கட்டுமான பணிகளைக் கையில் எடுத்துள்ளது. குறிப்பாகப் பெங்களூர் நகரின் முக்கியமான பகுதிகளான சில்க் போர்டு, எலக்ட்ரானிக் சிட்டி, கே ஆர் புரம், பனசங்கரி ஆகிய பகுதிகளை மெட்ரோ ரயில் மூலம் இணைக்கும் திட்டத்தை வேகமாகச் செயல்படுத்தி வருகிறது.
மெட்ரோ ரயில் பாதை
இதில் தற்போது சில்க் போர்டு முதல் கேஆர் புரம் வரையிலான மெட்ரோ ரயில் பாதையின் கட்டுமான பணிகளை BMRCL துவங்கியுள்ளதாகவும், இந்தப் பணிகள் அடுத்த 1.5 முதல் 2 வருடம் வரையில் நடைபெறும் காரணத்தாலும், அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் அனைத்திற்கும் டிசம்பர் 2022 வரையில் Work From Home கொடுக்க வேண்டும் எனக் கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை வைத்துள்ளது.
டிசம்பர் 2022 வரை WFH
சில்க் போர்டு முதல் கேஆர் புரம் வரையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கும் காரணத்தாலும், டிராபிக் நெரிசலைச் சமாளித்துக் கட்டுமான பணிகளைச் செய்வது என்பது மிகவும் கடினம் என்பதாலும், டிசம்பர் 2022 வரையில் ORR பகுதியில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு Work From Home அளிக்க வேண்டும் எனக் கர்நாடக மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், ஐடி துறை அமைச்சர் ரமணா ரெட்டி கோரிக்கை வைத்துள்ளார்.
அவுட்டர் ரிங் ரோடு பகுதி
இந்த அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் சிறிதும் பெரிதுமாகப் பல ஐடி நிறுவனங்கள் டெக் பார்க்-கள் உள்ளது. இதனால் நாள் முழுக்க சாலையில் டிராபிக் நெரிசல் இருக்கும். இப்பகுதியில் 6 வழி சாலைகள், சர்வீஸ் சாலைகள் இருந்தாலும் டிராபிக் நெரிசல் குறைவில்லாமல் உள்ளது.
சில்க் போர்டு முதல் எலக்ட்ரானிக் சிட்டி
இந்தக் கொரோனா காலத்தில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றிய காரணத்தால் டிராபிக் நெரிசல் இல்லாமல் பிற இடங்களில் மெட்ரோ கட்டுமான பணிகள் பிரச்சனை இல்லாமல் நடைபெற்றது. குறிப்பாகச் சில்க் போர்டு முதல் எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் திட்டங்கள் மிகவும் வேகமாகக் கட்டப்பட்டு உள்ளது.
முக்கியமான பரிந்துரைகள்
ஆனால் தற்போது மிகவும் முக்கியமான அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கும் காரணத்தால் டிசம்பர் 2022 வரையில் work from home மட்டும் அல்லாமல், ஐடி ஊழியர்களை BMTC அல்லது நிறுவனம் அளிக்கும் பஸ் சேவைகள் மூலம் ஊழியர்களை நிறுவனத்திற்கு வர அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் ரமணா ரெட்டி, காரணம் இப்பகுதியில் பஸ்களுக்கு என பிரத்தியேகமான சாலை வசதி உள்ளது. இதன் மூலம் ஐடி ஊழியர்கள் வேகமாக அலுவலகத்திற்குச் செல்ல முடியும்.
நாஸ்காம் அமைப்பு
இந்தப் பரிந்துரைகளைக் கர்நாடக அரசு சார்பில் ஐடி நிறுவனங்களின் தலைமை கூட்டமைப்பான நாஸ்காம்-யிடம் சமர்ப்பிக்கப்பட்டும், ஐடி நிறுவனங்கள் மத்தியிலும் பகிரப்பட்டு உள்ளது. சுமார் 19 கிலோமீட்டர் தொலைவிற்குப் பெங்களூரில் தற்போது மெட்ரோ ரயில் திட்டம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவடைய 1.5 வருடம் முதல் 2 வருடம் வரை ஆகும் எனத் தெரிகிறது.
ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள்
அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் மட்டும் சுமார் 10 டெக் பார்க், மற்றும் 700க்கும் அதிகமான நிறுவனங்கள் உள்ளது. இந்த நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் மூலம் காலை 7.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரையில் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் டிராபிக் உருவாகிறது. இப்பகுதியில் ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செய்கிறது.
பரிந்துரை மட்டுமே
மேலும் இந்த டிசம்பர் 2022 வரையிலான Work From Home திட்டத்தை உத்தரவாக இல்லாமல் பரிந்துரையாக மட்டுமே முன்வைக்கப்படுகிறது எனவும் அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications