இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான அமுல் கடந்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பால் மற்றும் தயிர் பாக்கெட்களை விற்பனை செய்ய நுழைந்த போது பெரும் எதிர்ப்பை சந்தித்தது. இந்த நிலையில் தற்போது கிரீஸ் டப்பாவை எப்படி ஒதைச்ச என்ற கதையாக அமுல் ஆதிக்கம் செலுத்தும் மாநிலத்தில் நந்தினி நுழைய உள்ளது.
கர்நாடக அரசுக்கு சொந்தமான பிரபல பால் பிராண்டான நந்தினி, தற்போது தனது வர்த்தக சந்தையை விரிவுபடுத்தி டெல்லி-க்குள் நுழைய தயாராகி வருகிறது. கர்நாடக பால் கூட்டுறவு கழகம் (KMF), நவம்பர் 21 அன்று தலைநகர் டெல்லியில் தனது பால் பொருட்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் நந்தினி பிராண்ட் வட இந்திய சந்தையில் தனது முதல் அடியை எடுத்து வைக்கிறது.

நந்தினி பிராண்ட் முதலில் டெல்லியில் பால் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் பின்பு பிற பொருட்களை அறிமுகம் செய்யும், சமீபத்தில் திருப்பதி விவகாரத்தில் நந்தினி பிராண்ட் தயாரிப்புகளின் தரம் இந்தியா முழுவதும் அறிந்த நிலையில், இதை சரியாக பயன்படுத்திக்கொள்ள டெல்லியில் களமிறங்குகிறது.
இதேவேளையில் நந்தின் நவம்பர் 26 அன்று, பெங்களூரில் இட்லி மற்றும் தோசை மாவு ஆகியவற்றை அறிமுகம் செய்து புதிய வர்த்தக பிரிவில் களமிறங்குகிறது. இதன் மூலம் கர்நாடகாவிலும் நந்தினி தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய உள்ளது.
KMF அமைப்பின் நந்தினி தற்போது கர்நாடகா-வை தாண்டி மகாராஷ்டிரா (மும்பை, நாக்பூர், புனே மற்றும் சோலாப்பூர்), கோவா, ஹைதராபாத், சென்னை மற்றும் கேரளா ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க இருப்பைக் கொண்டுள்ளது. டெல்லியில் நுழைவதன் மூலம் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வட இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அமுல், மதர் டெய்ரி, மதுசூதன் மற்றும் நமஸ்தே இந்தியா போன்ற பிராண்டுக்களுடன் நேருக்கு நேர் போட்டியிட உள்ளது.
நந்தினி பிராண்ட் டெல்லி மற்றும் ஹரியானாவின் சில பகுதிகளுக்கு சேவை செய்யும் திட்டத்துடன் தினமும் 1 லட்சம் கிலோ லிட்டர் பாலை மண்டியா பால் யூனியினில் இருந்து டெல்லிக்கு அனுப்ப 3 33 கிலோலிட்டர் டாங்கர்களை போக்குவரத்தில் ஈடுப்படுத்த டெண்டர் விட்டுள்ளது. இதன் மூலம் வாரம் 25 டேங்கர்கள் மண்டியாவில் இருந்து டெல்லிக்கு செல்ல உள்ளது, இந்த புதிய வர்த்தகம் மூலம் மண்டியாவில் இருக்கும் மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு அதிகப்படியான வருவாய் கிடைக்கும்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications