கர்நாடக ராஜ்யோத்சவத்தை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ (Namma Metro) மஞ்சள் வழித்தடத்தில் (Yellow Line) 5-வது மெட்ரோ ரயில் சேவை நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் தொடங்குவதாக, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மஞ்சள் வழித்தடம் என்பது பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ ரயில் அமைப்பின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இது பெங்களூருவின் தெற்குப் பகுதியை, முக்கிய ஐ.டி. மற்றும் தொழில் மையங்களுடன் இணைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 5-வது ரயில் இணைக்கப்படுவதால், இந்த பரபரப்பான மஞ்சள் வழித்தடத்தில் பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகபட்சப் பயணிகள் நேரத்தின்போது, ரயில் சேவைகளுக்கு இடையிலான கால இடைவெளி கணிசமாக குறையும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது 19 நிமிடங்களாக இருக்கும் சேவை இடைவெளி, இனி அனைத்து நாட்களிலும் பீக் ஹவர்ஸ் நேரத்தில் 15 நிமிடங்களாக மேம்படுத்தப்படும் என்று BMRCL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், குறைந்த காத்திருப்பு நேரத்துடன் பயணிகளுக்கு சீரான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆர்.வி. சாலை (R V Road) மற்றும் பொம்மசந்திரா (Bommasandra) ஆகிய இரு டெர்மினல்களில் இருந்து புறப்படும் முதல் மற்றும் கடைசி ரயில்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில்களை உருவாக்கியது யார்..?: மஞ்சள் வழித்தடத்திற்கான இந்த புதிய மெட்ரோ பெட்டிகள், சீனாவின் அரசுக்கு சொந்தமான சி.ஆர்.ஆர்.சி நாஞ்சிங் புசென் கோ லிமிடெட் (CRRC Nanjing Puzhen Co Ltd) நிறுவனத்துடன் போடப்பட்ட துணை ஒப்பந்தத்தின் கீழ், டைட்டகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
BMRCL, 2019 டிசம்பரில், TRSL நிறுவனத்திற்கு ரூ.1,578 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மஞ்சள் வழித்தடத்திற்கு 15 ரயில்களும், ஊதா மற்றும் பச்சை வழித்தடங்களுக்கு 21 ரயில்களும் என மொத்தம் 36 ரயில் பெட்டிகளை 173 வாரங்களுக்குள் வழங்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தியப் பங்குதாரரைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பொறியாளர்களுக்கு விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த ஆர்டர் தாமதமானது.
மஞ்சள் வழித்தடத்தின் மாதிரி ரயில் CRRC ஆல் கடந்த 2024 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து TRSL மேலும் இரண்டு ரயில்களை இந்த ஆண்டு வழங்கியது. கடந்த செப்டம்பர் மாதம்தான் 4-வது ரயில் இந்த வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் 5 ரயில்கள், 19.15 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன.
More From GoodReturns

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications