கர்நாடக ராஜ்யோத்சவத்தை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ (Namma Metro) மஞ்சள் வழித்தடத்தில் (Yellow Line) 5-வது மெட்ரோ ரயில் சேவை நவம்பர் 1ஆம் தேதியான இன்று முதல் தொடங்குவதாக, பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (BMRCL) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மஞ்சள் வழித்தடம் என்பது பெங்களூருவில் உள்ள நம்ம மெட்ரோ ரயில் அமைப்பின் முக்கியமான வழித்தடங்களில் ஒன்றாகும். இது பெங்களூருவின் தெற்குப் பகுதியை, முக்கிய ஐ.டி. மற்றும் தொழில் மையங்களுடன் இணைக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய 5-வது ரயில் இணைக்கப்படுவதால், இந்த பரபரப்பான மஞ்சள் வழித்தடத்தில் பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகபட்சப் பயணிகள் நேரத்தின்போது, ரயில் சேவைகளுக்கு இடையிலான கால இடைவெளி கணிசமாக குறையும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது 19 நிமிடங்களாக இருக்கும் சேவை இடைவெளி, இனி அனைத்து நாட்களிலும் பீக் ஹவர்ஸ் நேரத்தில் 15 நிமிடங்களாக மேம்படுத்தப்படும் என்று BMRCL அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம், குறைந்த காத்திருப்பு நேரத்துடன் பயணிகளுக்கு சீரான மற்றும் நம்பகமான சேவையை வழங்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஆர்.வி. சாலை (R V Road) மற்றும் பொம்மசந்திரா (Bommasandra) ஆகிய இரு டெர்மினல்களில் இருந்து புறப்படும் முதல் மற்றும் கடைசி ரயில்களின் நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் மெட்ரோ நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ரயில்களை உருவாக்கியது யார்..?: மஞ்சள் வழித்தடத்திற்கான இந்த புதிய மெட்ரோ பெட்டிகள், சீனாவின் அரசுக்கு சொந்தமான சி.ஆர்.ஆர்.சி நாஞ்சிங் புசென் கோ லிமிடெட் (CRRC Nanjing Puzhen Co Ltd) நிறுவனத்துடன் போடப்பட்ட துணை ஒப்பந்தத்தின் கீழ், டைட்டகர் ரயில் சிஸ்டம்ஸ் லிமிடெட் (TRSL) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
BMRCL, 2019 டிசம்பரில், TRSL நிறுவனத்திற்கு ரூ.1,578 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கியது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மஞ்சள் வழித்தடத்திற்கு 15 ரயில்களும், ஊதா மற்றும் பச்சை வழித்தடங்களுக்கு 21 ரயில்களும் என மொத்தம் 36 ரயில் பெட்டிகளை 173 வாரங்களுக்குள் வழங்க வேண்டியிருந்தது. ஆனால், இந்தியப் பங்குதாரரைக் கண்டுபிடிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பொறியாளர்களுக்கு விசா பெறுவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த ஆர்டர் தாமதமானது.
மஞ்சள் வழித்தடத்தின் மாதிரி ரயில் CRRC ஆல் கடந்த 2024 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து TRSL மேலும் இரண்டு ரயில்களை இந்த ஆண்டு வழங்கியது. கடந்த செப்டம்பர் மாதம்தான் 4-வது ரயில் இந்த வழித்தடத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது மொத்தம் 5 ரயில்கள், 19.15 கி.மீ நீளமுள்ள மஞ்சள் வழித்தடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளன.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications