பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்ம மெட்ரோ பிங்க் பாதை திறப்புக்கான காலக்கெடுவை பெங்களூரு மெட்ரோ ரயில்வே கழகம் (BMRCL) புதுப்பித்துள்ளது. அந்தவகையில், தற்போது கட்டமைப்பில் உள்ள 21.25 கிலோமீட்டர் நீளமான இந்த வழித்தடம், பல்வேறு கட்டங்களாக திறக்கப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் கட்டமாக வரும் டிசம்பர் மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மற்றும் முழு பிங்க் பாதை வழித்தடமும் 2026 ம் ஆண்டின் இறுதிக்குள் செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பெங்களூரு மெட்ரோ பிங்க் பாதை: முதல் கட்டமாக 13.92 கி.மீ. நீளத்தைக் கொண்டதாக இருக்கும், இதில் முக்கியமான 12 நிலையங்கள் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதாவது, கலேனா அக்ரஹாரா (கோட்டிகெரே) முதல் நாகவரா வரை இணைக்கும் பிங்க் பாதை இரண்டு கட்டங்களாக உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல் கட்டம் நிலத்தடி மற்றும் உயர்த்தப்பட்ட பிரிவுகளை உள்ளடக்கியது, சுமார் 13.92 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்த, ஆறு அடித்தள நிலையங்கள் மற்றும் ஆறு உயர்த்தப்பட்ட நிலையங்கள் உட்பட 12 நிலையங்களை உள்ளடக்கியதாக இருக்கும். பெங்களூரு நகரத்தின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, இந்த பகுதியில் முதலில் சேவையைத் தொடங்கும் நோக்குடன் மெட்ரோ ரயில்வே கழகம் திட்டமிட்டுள்ளது.
இருப்பினும், இந்த மெட்ரோ பிங்க் பாதை கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடைந்தபின் வடபெங்களூருவையும் தென்பெங்களூருவையும் இணைக்கும் வகையில் நடத்தை வசதியை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த பிங்க் பாதை, ஜெயதேவா மருத்துவமனை, மகாத்மா காந்தி சாலை, சிவாஜி நகர் மற்றும் கன்டோன்மென்ட் உள்ளிட்ட பரபரப்பான பகுதிகள் வழியாக செல்கிறது.
டைம்ஸ் நவ் அறிக்கையின்படி, கலேனா அக்ரஹாரா-தவரேகெரே பகுதிக்கிடையிலான வழித்தடம் தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில் தவரேகெரே, ஜெயதேவா இன்டர்சேஞ்ச், ஜே.பி. நகர் 4வது கட்டம், ஐஐஎம்பி, ஹூலிமவு மற்றும் கலேனா அக்ரஹாரா போன்ற முக்கியமான நிலையங்கள் அடங்கியுள்ளன.
மெட்ரோ சுரங்கப்பாதை அமைக்கும் பணி புதுப்பிப்பு: கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அறிக்கைகளின்படி, பிங்க் பாதையில் உள்ள சுரங்கப்பாதை பணிகளில் 93.13 சதவிகிதம் வேலை ஏற்கனவே முடிந்துவிட்டது. 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வணிக ரீதியான செயல்பாடுகள் தொடங்குவதை இலக்காகக் கொண்டு, பாதை அமைத்தல் மற்றும் அமைப்புகள் நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, அடித்தள பகுதியில் சுமார் 13.89 கிலோமீட்டர் நீளத்தில் 12 நிலையங்கள் உள்ளன, அதே நேரத்தில் உயர்த்தப்பட்ட பகுதியில் சுமார் 7.37 கிலோமீட்டர் நீளத்தில் 6 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
MG Road Station முக்கிய சந்திப்பு நிலையம்: நிலத்தடியில் சுமார் 65 அடி ஆழத்தில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி. சாலை நிலையம், பிங்க் பாதை மற்றும் பர்பிள் பாதை ஆகியவற்றுக்கிடையிலான சந்திப்பு நிலையமாக ( interchange) வடிவமைக்கப்பட்டுள்ளது. சுமார் 93,775 சதுரஅடிகள் பரப்பளவை கொண்ட எம்.ஜி. சாலை நிலையம், நான்கு நுழைவு வாயில்கள் கொண்டதாக இருக்கும், இது மற்ற நிலையங்களைவிட வித்தியாசமாகும், ஏனெனில் பொதுவாக மற்ற நிலையங்களில் இரண்டு நுழைவு வாயில்கள் மட்டுமே இருக்கும்.
சுரங்கப் பணியின்போது புவியியல் சவால்கள்: ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2024 வரை நடைபெற்ற பணிகளில், மொத்தம் 9 சுரங்க உள்கட்டமைப்பு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன, இவற்றின் மூலம் 20.99 கிலோமீட்டர் நீளமுடைய இரட்டை சுரங்கப் பாதைகள் வெற்றிகரமாக தோண்டப்பட்டன. பெங்களூரில் முதன்முறையாக, பிங்க் பாதையில் உள்ள நிலத்தடி நிலையங்களில் பிளாட்ஃபாரம் ஸ்கிரீன் கதவுகள் அமைக்கப்படுகின்றன. இந்த பாதையில் உள்ள ரயில்கள் மணிக்கு 80 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications