இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் தற்போது பெரும்பாலான மக்கள் எதிர்பார்ப்பது மெட்ரோ சேவை. நாள் முழுவதும் டிராபிக் பிரச்சனை இருக்கும் காரணத்தால் பெங்களூர் மக்கள் மெட்ரோ சேவையை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் கட்டுமான பணிகளை அனைத்து முடிக்கப்பட்ட மஞ்சல் லைன் தடத்தில் இன்னும் சேவை துவங்கப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கியமான தகவலை வெளியிட்டு எலக்ட்ரானிக்ஸ் சிட்டி பகுதியில் இருக்கும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. BMRCL வெளியிட்டுள்ள அறிவிப்பில் நம்ம மெட்ரோவின் மஞ்சள் லைனுக்கான மூன்றாவது டிரைன்செட்-க்கு மூன்று மெட்ரோ ரயில் பெட்டிகள், மேற்கு வங்காளத்தின் உத்தர்பாராவில் உள்ள டிடகர் ரயில் சிஸ்டம்ஸ் தொழிற்சாலையிலிருந்து செவ்வாய்க்கிழமை அனுப்பப்பட்டன.

இந்த மூன்றாவது ரயில் தொகுதியின் மீதமுள்ள மூன்று பெட்டிகள், மே 2 ஆம் தேதிக்குள் சரக்கு வாகனத்தில் ஏற்றப்பட்டு பெங்களூருக்கு கொண்டு வரப்படும் எனவும், இவை மே 10 முதல் மே 15ஆம் தேதிக்குள் பெங்களூர் வந்தடையும் எனவும் பிஎம்ஆர்சிஎல் அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் பெட்டிகளை பகுதி பகுதியாக அனுப்ப முக்கிய காரணம் மெட்ரோ பெட்டிகளைக் கொண்டு செல்ல தேவையான சிறப்பு வாகனங்கள் (டிரெய்லர்கள்) கிடைக்காதது தான் எனவும் பிஎம்ஆர்சிஎல் விளக்கியுள்ளது.
இருப்பினும், மீதமுள்ள பெட்டிகளை விரைவில் கொண்டு வருவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்த மெட்ரோ பெட்டிகளின் வருகை, மஞ்சள் பாதையின் செயல்பாட்டை வேகப்படுத்தி விரைவில் மெட்ரோ சேவை துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மஞ்சள் பாதை, ஆர்வி ரோடு முதல் பொம்மசந்திரா வரை 18.82 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்டு, பெங்களூருவின் முக்கிய பகுதிகளை இணைக்க உள்ளது.
பெங்களூருவின் முக்கிய பகுதிகளான ஆர்வி ரோடு, பிடிஎம் லேஅவுட், சென்ட்ரல் சில்க் போர்டு, எலக்ட்ரானிக்ஸ் சிட்டி மற்றும் பொம்மசந்திரா ஆகியவற்றை மஞ்சள் லைன் இணைக்கும் ஒரு முக்கிய போக்குவரத்து திட்டமாகும். 18.82 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட இந்த பாதையில் 16 மெட்ரோ நிலையங்கள் உள்ளது. இது அனைத்தும் சாலைக்கு மேலே அமைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரின் தெற்கு பகுதிகளை வடக்கு பகுதியுடன் இணைக்கும் முதல் மெட்ரோ பாதை இது என்பதால் மிகவும் ஸ்பெஷல். தெற்கு பகுதி பல காலமாக வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்தாலும் முக்கியமான சேவைகள் இங்கு இல்லை. குறிப்பாக மெட்ரோ, மால், பெரிய லைப்ரரி, அரசு கல்லூரிகள் போன்றவை குறைவு. இதற்கு மாறாக எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உலகளாவிய நிறுவனங்கள் குவிந்துக்கிடக்கிறது.
இதனால் இந்த மஞ்சள் லைன் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஐடி மற்றும் டெக் ஊழியர்களுக்கு ஜாக்பாட் ஆக அமையும்.
ஆர்வி ரோடு மெட்ரோ நிலையத்தில் மஞ்சள் லைன் மற்றும் கிரீன் லைன் இணைக்கப்படுகிறது. இதேபோல் ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ நிலையம் பிங்க் லைன் உடன் இணைக்கப்படுகிறது. இதன் மூலம் மஞ்சள் லைன் 3 மெட்ரோ பாதைகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications