இந்தியாவின் ஐடி நகரமான பெங்களூரில் டிராபிக் பிரச்சனை தலைவிரித்தாடும் வேளையில், நகரின் முக்கிய பகுதிகளை மெட்ரோ ரயில் மூலம் இணைக்கப்படும் காரணத்தால் பல இடத்தில் டிராபிக் பிரச்சனை குறைந்து வருகிறது.
உதாரணமாக சமீபத்தில் ஓசூர் சாலையில் மெட்ரோ சேவை அறிமுகம் செய்யப்பட்ட காரணத்தால் இச்சாலையில் 10 சதவீத டிராபிக் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த மெட்ரோ சேவையை அனைத்து தரப்பு மக்களும் அதிகளவில் பயன்படுத்தி வரும் வேளையில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக கட்டண நிர்ணயக் குழு (எஃப்எஃப்சி) பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு ஆண்டும் மெட்ரோ டிக்கெட் விலையில் 5 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம் பிப்ரவரி மாதம் முதல் கட்டணம் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் தினசரி பயன்படுத்தும் மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக உள்ளது
கடந்த ஆண்டு பிப்ரவரியில் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிஎம்ஆர்சிஎல்) மெட்ரோ கட்டணத்தை 71 சதவீதம் வரை உயர்த்தியது. இதனால் பெங்களூர் மெட்ரோ தான் இந்தியாவின் விலை உயர்ந்த மெட்ரோ என பெயர் பெற்றது.
இந்த நிலையில் மீண்டும் வருடாந்திர அடிப்படையில் கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகியுள்ளது. இது டிராபிக் பிரச்சனையை சமாளிக்க பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்களுக்கு பெரும் பொருளாதார சுமையாக அமையும். இந்த நிலையில் மெட்ரோ பயணிகள் இந்த உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாமானிய மக்களுக்கு பொது போக்குவரத்து அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்தியா முழுவதும் தனிநபர் போக்குவரத்து அதிகரித்து வரும் காரணத்தால் டிராபிக் பிரச்சனை மட்டும் அல்லாமல் பார்கிங் பிரச்சனையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதை சரி செய்யும் வகையில் கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வர பல மாநிலங்கள் முயற்சி செய்து வருகிறது.
இதேபோல் மெட்ரோ நகரங்களில் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில், இத்தகைய கட்டணத்தை உயர்வு மக்களை இதை பயன்படுத்துவதை நிறுத்தும் மனநிலையை அதிகரிக்கும்.
More From GoodReturns

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

பெங்களூரில் தண்ணீர் சப்ளை கட்.. மக்களுக்கு திண்டாட்டம் தான்..!

நச்சுன்னு நாலு திட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் கர்நாடக..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

வருமானம் போனாலும் பரவாயில்ல!! டிசிஎஸ் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன ஊழியர்கள்!!

கொத்து கொத்தாக அமெரிக்கா விட்டு வெளியேறும் இந்தியர்கள்.. நேரா பெங்களூரில் லேண்டிங்.. என்ன காரணம்..?

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

அமெரிக்காவில் புது டிரெண்ட்..! ஷூ, செருப்பு இல்லாமல் ஆபீஸ்.. தெய்வீகமாக இருக்கு பாஸ்..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

AI நீங்க நினைக்கிற மாதிரி 'ஈசி' கிடையாது.. ரொம்ப கஷ்டம்.. உண்மையை உடைத்த விப்ரோ COO சஞ்சீவ்..!!



Click it and Unblock the Notifications