பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூரு அண்மைக்காலமாக கடும் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் வெயிலும் மக்களை ஒரு புறம் வாட்டி வருகிறது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்படி வெயிலில் இருந்து தப்பிக்க ஒருவர் செய்த செயல் தான் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
ரிஷப் ஸ்ரீவாஸ்தவா என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூரு நகரம் சில்லென்ற சூழலில் இருந்து கிரில்லுக்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார். அதாவது எப்பொழுதும் சில்லென இருக்கும் பெங்களூரு நகரம் தற்போது அனைவரையும் வறுத்தெடுக்கும் நகரமாக மாறிவிட்டது என அவர் கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் தான் தற்போது ஓயோவில் ஏசி ரூம் எடுத்து தஞ்சம் அடைந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பெங்களூருவாசிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
பெங்களூரு வெயில் குறித்து பலரும் இதில் புலம்பலை பதிவிட்டு வருகின்றனர். ஓயோ ரூம்ஸ் நிறுவனம் இதனை மறுபதிவிட்டு பெங்களூரு உனக்கு இருந்தது ஒரே வேலை , அதையும் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளது.
பெங்களூரில் அண்மைக்காலமாக வெயில் அதிகரித்து வருவது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் காண முடிகிறது . அண்மையில் ஒரு நபர் டிராபிக் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
அதேபோல பெங்களூருவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கடும் வெப்பம் காணப்படுகிறது. இங்கே வெப்பநிலையானது 36.4 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் கலாபுராகியில் 40 டிகிரி செல்சியஸ் என வெப்பம் பதிவாகியுள்ளது.
பெங்களூரு நகரம் என்றாலே குளுகுளு சூழல் என்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதோ வெயில், தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நினைவுக்கு வருகின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலைகள் என்பது பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை, போதிய மழையின்மை, வெயில், வறட்சி ஆகிய பிரச்னைகளை மக்கள் படிப்படியாக அனுபவித்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

திண்டுக்கல் பக்கம் வீசும் அதிர்ஷ்ட காற்று!! அமைச்சர் டிஆர்பி ராஜா சொன்ன குட் நியூஸ்!!

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

லட்சக்கணக்குல சம்பளம் குடுக்கிறாங்கனு இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க!! ஐடி ஊழியர்கள் தலையில் தொங்கும் கத்தி!!

துபாயில் சிக்கிதவித்த பிவி.சிந்து, இந்திய திரும்பினார்.. "3 நாட்கள்" பெங்களூரில் இறங்கியதும் செய்த விஷயம்..!!

வெறிச்சோடி போன பெங்களூரு விமான நிலையம்.. 42 விமானங்கள் ரத்து..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications