பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூரு அண்மைக்காலமாக கடும் தண்ணீர் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளது. தண்ணீருக்காக அலைந்து கொண்டிருக்கும் சூழலில் வெயிலும் மக்களை ஒரு புறம் வாட்டி வருகிறது. இதனால் பெங்களூருவாசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இப்படி வெயிலில் இருந்து தப்பிக்க ஒருவர் செய்த செயல் தான் சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
ரிஷப் ஸ்ரீவாஸ்தவா என்பவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பெங்களூரு நகரம் சில்லென்ற சூழலில் இருந்து கிரில்லுக்கு மாறிவிட்டதாக கூறியுள்ளார். அதாவது எப்பொழுதும் சில்லென இருக்கும் பெங்களூரு நகரம் தற்போது அனைவரையும் வறுத்தெடுக்கும் நகரமாக மாறிவிட்டது என அவர் கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் தற்போது கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் தான் தற்போது ஓயோவில் ஏசி ரூம் எடுத்து தஞ்சம் அடைந்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பெங்களூருவாசிகளின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
பெங்களூரு வெயில் குறித்து பலரும் இதில் புலம்பலை பதிவிட்டு வருகின்றனர். ஓயோ ரூம்ஸ் நிறுவனம் இதனை மறுபதிவிட்டு பெங்களூரு உனக்கு இருந்தது ஒரே வேலை , அதையும் இப்போது நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளது.
பெங்களூரில் அண்மைக்காலமாக வெயில் அதிகரித்து வருவது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் அதிகம் காண முடிகிறது . அண்மையில் ஒரு நபர் டிராபிக் போலீஸ் அதிகாரிகளுக்கு தண்ணீர் பாட்டில் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
அதேபோல பெங்களூருவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கடும் வெப்பம் காணப்படுகிறது. இங்கே வெப்பநிலையானது 36.4 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டியுள்ளது. குறிப்பாக கர்நாடக மாநிலம் கலாபுராகியில் 40 டிகிரி செல்சியஸ் என வெப்பம் பதிவாகியுள்ளது.
பெங்களூரு நகரம் என்றாலே குளுகுளு சூழல் என்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதோ வெயில், தண்ணீர் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் ஆகியவை தான் நினைவுக்கு வருகின்றன.
பருவநிலை மாற்றம் காரணமாக காலநிலைகள் என்பது பெரிய மாற்றத்தை கண்டு வருகிறது. இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. பருவம் தவறிய மழை, போதிய மழையின்மை, வெயில், வறட்சி ஆகிய பிரச்னைகளை மக்கள் படிப்படியாக அனுபவித்து வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications