பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூரு என்றாலே ஸ்டார்ட் அப் தலைநகரம் ,ஐடி தலைநகரம் ,அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருக்கக்கூடிய ஒரு நகரம், பார்ட்டி கலாச்சாரம் அதிகமாக இருக்கக்கூடிய ஒரு நகரம் என பல்வேறு அடையாளங்கள் இருக்கின்றன.
அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படக்கூடிய ஒரு அடையாளமாக போக்குவரத்து நெரிசல் இருக்கிறது. பெங்களூருவில் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு இடத்திற்கு சென்று திரும்பி வரவேண்டும் என்றாலே பலருக்கும் தலைவலி வந்துவிடும். டிராபிக்கல் பயணம் செய்து அலுவலகத்திற்கு சென்று வர வேண்டுமே, பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வர வேண்டுமே என பலரும் சலித்துக் கொள்வார்கள்.

இந்தியாவில் யாரிடமாவது நான் பெங்களூரில் வசிக்கிறேன் என கூறி பாருங்கள் அந்த ஊர் டிராபிக்ல எப்படி இருக்கீங்க என கேட்பார்கள். பெங்களூர் என்றாலே டிராபிக் ஜாம் என்பதுதான் பெரும்பாலானவர்களின் மனதில் நிறைந்திருக்கிறது. பெங்களூரு டிராபிக் ஜாம் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு ஒருபுறம் ஏஐ கேமராக்களை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்து நிகழ நேர தகவல்களை வழங்குகிறார்கள் , மற்றொருபுறம் சாலையை உள் கட்டமைப்புகளை சீரமைக்கிறார்கள், எல்லா பக்கமும் மெட்ரோ ட்ரெயின் விடுகிறார்கள் இருந்தாலும் எப்பொழுது பார்த்தாலும் சாலைகள் எங்கும் பேருந்து ,கார்கள் ,இருசக்கர வாகனங்களாகவே காணப்படுகின்றன .
கர்நாடக மாநில அரசு பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என பெங்களூருவில் செயல்படும் பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்களையும், சமூக ஆர்வலர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையின் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன . அதில் மிக முக்கியமான ஒன்றுதான் congestion tax. அதாவது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய சாலையில் 90 நாட்களுக்கு முதல் கட்டமாக இதனை நடைமுறைப்படுத்தி பார்க்க கர்நாடக மாநில அரசு திட்டமிட்டு இருக்கிறது.
Congestion tax என்றால் ஒன்றுமில்லை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதற்கான வரி . அதாவது பெங்களூருவில் எப்பொழுதுமே டிராபிக் அதிகமாக காணப்படும் சாலைகளில் பீக் அவர்களில் ஒரு நபர் சிங்கிளாக காரை எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறார் என்றால் அவருக்கு இந்த வரி விதிக்கப்படும். அதாவது ஒருவருக்காக அவர் ஒரு காரை கொண்டு வருவதால் அந்த சாலையில் டிராபிக் அதிகமாகி விடுகிறதாம். எனவே இவ்வாறு வரி கூடுதல் வரிவிதித்தால் மக்கள் ஒரு நபருக்காக கார் எடுத்து பயன்படுத்துவதை நிறுத்துவார்கள் இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும் என அரசு கருதுகிறது.

குறிப்பிட்ட அந்த காருக்கான ஃபாஸ்ட் டேக் கணக்கிலிருந்து இந்த வரி என்பது எடுத்துக் கொள்ளப்படுமாம். இதன்படி அவுட்டர் ரிங் சாலையில் இது நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்திருக்கிறார்கள். அவுட்டர் ரிங் சாலையில் இனி சிங்கள் நபருக்காக கார் எடுத்துக்கொண்டு பயணம் செய்பவர்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருக்கும் . இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பயணிகள் இருந்தால் பிரச்சனை கிடையாது.
அடடே மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களால இவ்ளோ நன்மைகளா?
தற்போதைக்கு இது பரிந்துரையில் தான் இருக்கிறதே தவிர இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை ஆனால் இவ்வாறு வரி விதிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறையும், ஒரு நபருக்காக ஒரு காரை பயன்படுத்துவது குறைந்து அதிகமானவர்கள் பொது போக்குவரத்தையும் கார் பூலிங் சேவைகளையும் பயன்படுத்துவார்கள் இந்த கூடுதல் வருவாய் என்பது உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்கிறது அரசு.
பொதுமக்களோ போதிய அளவு பொது போக்குவரத்து இணைப்புகளையும் , சாலைகளையும் மேம்படுத்தாமல் இப்படி கூடுதல் வரிவிதித்து விட்டால் மட்டும் டிராபிக் பிரச்சனை தீர்ந்து விடுமா என்ற கேள்வி எழுப்புகிறார்கள் . உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய அரசு அதனை தவறி விட்டு பொதுமக்கள் மீது இப்படி வரி விதிப்பது எப்படி சரி ஆகும் என பலரும் கூறுகின்றனர் . சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் இதனை செயல்படுத்தினார்கள் என்றால் அங்கே பொது போக்குவரத்து வலுவாக உள்ளது பெங்களூருவில் அப்படி இருக்கிறதா என கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ இனி சிங்கிளாக கார் எடுத்து சென்றால் முதலில் இந்த கூடுதல் வரி தான் அனைவருக்கும் நினைவில் வரும். சிங்கிளாகவே இருப்பவர்கள் நிலைமை கொஞ்சம் மோசம் தான்.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications