கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (KSDMA), இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) பெங்களூருவின் கணிப்பு அடிப்படையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் பிடர், பிஜாப்பூர் மற்றும் குல்பர்கா மாவட்டங்களில், கடுமையான இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
கனமழையின் காரணமாகப் பெங்களூரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது, சென்னையை ஒப்பிடுகையில் பெங்களூரில் பெய்துள்ள மழை மிகவும் குறைவு தான். ஆனாலும் பல முக்கியமான பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதில் முக்கியமாக மான்யதா டெக் பார்க் மற்றும் பெங்களூரிலேயே மிகப்பெரிய மால் ஆக விளங்கும் மால் ஆப் ஆசியா சுற்றியுள்ள பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. மால் ஆப் ஆசியாவுக்குள் நுழைவாயில் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், இதனால் இன்றைய வர்த்தகம் மொத்தமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
நவீன கட்டமைப்புகள் உடன், நாட்டின் பிரபலமான தொழில்நுட்ப மையமாக வடிவமைக்கப்பட்ட மான்யதா டெக் பார்க், கனமழையின் காரணமாக மோசமான வெள்ளம் பாதிப்பால் மாட்டிக்கொண்டு உள்ளது.
பெங்களூரில் பெய்த தொடர் மழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், அவுட்டர் ரிங் ரோட்டில் 300 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த மான்யதா டெக் பார்க் என்ற மிகப்பெரிய அலுவலக வளாகம், மழை வெள்ளத்தால் முற்றிலும் சூழப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில், மான்யதா டெக் பார்க்கின் சாலைகள், திறந்த வெளிகள் என அனைத்தும் நீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். சில அலுவலகங்களின் அடித்தளங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக, மான்யதா டெக் பார்க்கில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழில்நுட்ப நிபுணர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். நேற்று மதியமே அனைத்து ஊழியர்களையும் வெளியேற அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று அனைவருக்கும் வொர்க் ப்ரம் ஹோம் கொடுக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications