பெங்களூர் மாஸ்.. ரியல் எஸ்டேட்-ல் பணத்தை போட்டவர்களுக்கு ஜாக்பாட்.. 3 வருடத்தில் இப்படியா..?

பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. 2022 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் வீட்டு விலை பெங்களூரின் முக்கியமான பகுதியில் சராசரியாக 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2022ல் 1 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியவர்களின் வீட்டின் மதிப்பு தற்போது குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகிறது.

பெங்களூர் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கு முக்கியமான காரணம், இக்காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் இருந்த அதிகப்படியான தேவை மற்றும் புதிய வீடுகள் சந்தையில் அறிமுகம் ஆன உடனேயே விற்பனை ஆனது ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இக்காலகட்டத்தில் பெங்களூரில் சுமார் 2.49 லட்சம் புதிய வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, இதில் 2.41 லட்சம் வீடுகள் விற்பனையாகின.

பெங்களூர் மாஸ்.. ரியல் எஸ்டேட்-ல் பணத்தை போட்டவர்களுக்கு ஜாக்பாட்.. 3 வருடத்தில் இப்படியா..?

சர்ஜாபூர் - அத்திப்பள்ளி பகுதி
பெங்களூரில் உள்ள பல பகுதிகளில் விலை உயர்வு காணப்பட்டாலும், சர்ஜாபூர்-அத்திப்பள்ளி சாலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் மூன்று ஆண்டுகளில் வீட்டு விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது.

2022-இல் ஒரு சதுர அடிக்கு சராசரியாக 4,568 ரூபாயாக இருந்த விலை 2025-இல் இது 7,800-க்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பெங்களூரின் வேகமான நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப துறை வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது.

ஏன் இந்த உயர்வு?
பெங்களூரில் சொந்த வீட்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இதற்கு முக்கிய காரணம். புதிய வீடுகள் விரைவாக விற்பனையாகின்றன, குறிப்பாக 2025 வரையில் ஆடம்பர வீடுகள், விலை உயர்ந்த வீடுகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய வீடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

இதனால் விலை உயர்வு தொடர்கிறது. சர்ஜாபூர்-அத்திப்பள்ளி போன்ற பகுதிகள் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால் மக்கள் மத்தியில் அதிகப்படியான விரும்பு இடமாக மாறியது. இது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.

2026ல் நிலைமை வேற
ஆனால் 2026ல் நிலைமை மாறியுள்ளது, ஐடி துறையில் ரெசிஷன் என்று சொல்லாமலேயே ரெசிஷனுக்கான அனைத்து பாதிப்பும் உருவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஐடி துறையின் தலைநகரான பெங்களூரில் மோசமான பாதிப்பு தெரிய துவங்கியுள்ளது. இப்போது ரெசிஷன் ஏஐ மூலம் வந்துள்ளது.

தற்போது AI தொழில்நுட்பத்தால் பணிகளை ஆட்டோமேட் செய்யத் தொடங்கியுள்ளதால், ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையலாம், ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பெங்களூரில் இருக்கும் மக்கள் சொந்த வீட்டை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஐடி துறையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு தற்காலிக பயமா அல்லது நீண்டகால பிரச்சினையின் தொடக்கமா என்பதை அடுத்த சில மாதங்களில் தெரியவரும். பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது IT துறையினரை மட்டுமே நம்பியிருப்பதால் 2026ல் இத்துறை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+