பெங்களூரு ரியல் எஸ்டேட் சந்தை கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளது. 2022 முதல் 2025 வரையிலான காலக்கட்டத்தில் வீட்டு விலை பெங்களூரின் முக்கியமான பகுதியில் சராசரியாக 63 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2022ல் 1 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியவர்களின் வீட்டின் மதிப்பு தற்போது குறைந்தபட்சம் 1.5 கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருப்பதாக சந்தை நிலவரங்கள் கூறுகிறது.
பெங்களூர் ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை உயர்வுக்கு முக்கியமான காரணம், இக்காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் இருந்த அதிகப்படியான தேவை மற்றும் புதிய வீடுகள் சந்தையில் அறிமுகம் ஆன உடனேயே விற்பனை ஆனது ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. இக்காலகட்டத்தில் பெங்களூரில் சுமார் 2.49 லட்சம் புதிய வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன, இதில் 2.41 லட்சம் வீடுகள் விற்பனையாகின.

சர்ஜாபூர் - அத்திப்பள்ளி பகுதி
பெங்களூரில் உள்ள பல பகுதிகளில் விலை உயர்வு காணப்பட்டாலும், சர்ஜாபூர்-அத்திப்பள்ளி சாலையில் இருக்கும் ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இந்த பகுதியில் மூன்று ஆண்டுகளில் வீட்டு விலை 71 சதவீதம் உயர்ந்துள்ளது.
2022-இல் ஒரு சதுர அடிக்கு சராசரியாக 4,568 ரூபாயாக இருந்த விலை 2025-இல் இது 7,800-க்கு உயர்ந்துள்ளது. இந்த உயர்வு பெங்களூரின் வேகமான நகரமயமாக்கல் மற்றும் தொழில்நுட்ப துறை வளர்ச்சியால் ஏற்பட்டுள்ளது.
ஏன் இந்த உயர்வு?
பெங்களூரில் சொந்த வீட்டுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடி ஊழியர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் இதற்கு முக்கிய காரணம். புதிய வீடுகள் விரைவாக விற்பனையாகின்றன, குறிப்பாக 2025 வரையில் ஆடம்பர வீடுகள், விலை உயர்ந்த வீடுகள், 1 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய வீடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
இதனால் விலை உயர்வு தொடர்கிறது. சர்ஜாபூர்-அத்திப்பள்ளி போன்ற பகுதிகள் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளால் மக்கள் மத்தியில் அதிகப்படியான விரும்பு இடமாக மாறியது. இது விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது.
2026ல் நிலைமை வேற
ஆனால் 2026ல் நிலைமை மாறியுள்ளது, ஐடி துறையில் ரெசிஷன் என்று சொல்லாமலேயே ரெசிஷனுக்கான அனைத்து பாதிப்பும் உருவாகியுள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியாவின் ஐடி துறையின் தலைநகரான பெங்களூரில் மோசமான பாதிப்பு தெரிய துவங்கியுள்ளது. இப்போது ரெசிஷன் ஏஐ மூலம் வந்துள்ளது.
தற்போது AI தொழில்நுட்பத்தால் பணிகளை ஆட்டோமேட் செய்யத் தொடங்கியுள்ளதால், ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறையலாம், ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் பெங்களூரில் இருக்கும் மக்கள் சொந்த வீட்டை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஐடி துறையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு தற்காலிக பயமா அல்லது நீண்டகால பிரச்சினையின் தொடக்கமா என்பதை அடுத்த சில மாதங்களில் தெரியவரும். பெங்களூர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது IT துறையினரை மட்டுமே நம்பியிருப்பதால் 2026ல் இத்துறை வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

LPG தட்டுப்பாடு.. அதானிக்கு அடித்த யோகம்.. 2 நாளில் கோடி கோடியாய் பண மழை..

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!



Click it and Unblock the Notifications