கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க முடியாமல் கார்ப்பொரேஷன் நிர்வாகம் திணறுகிறது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் தங்களுக்கு வொர்க் பிரம் ஹோம் வசதி தரவேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் மக்களின் மோசமான நிலையை இந்த செய்தி வெளிக்கொண்டு வந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த பவானி மணி முத்துவேல் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சமைக்க, சுத்தம் செய்ய, வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்த இந்த வாரம் வெறும் 100 லிட்டர் குடிநீர் தான் கிடைத்துள்ளது.
குளிப்பதற்கும் கழிவறைக்கும், துணை துவைப்பதற்கும் இதனால் மிகவும் சிரமமாக இருப்பதாக பவானி மணி கூறியுள்ளார்.
அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இவர் கூறுகையில், நாங்கள் பொதுவாக நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கிறோம், ஆனால் அது வறண்டு கொண்டிருக்கிறது. 40 வருடங்களில் தான் அனுபவித்த மிக மோசமான தண்ணீர் நெருக்கடி இது என்று அவர் கூறினார்.
பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் சுற்றுப்புறத்தில் உள்ள பல உலகளாவிய சாப்ட்வேர் நிறுவனங்களின் ஆடம்பரமான தலைமையகத்தின் அருகே உள்ள ஆடம்பரமற்ற குடியிருப்பு பகுதிதான் அம்பேத்கர் நகர்.
பெங்களூரு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழக்கத்துக்கு மாறான வெப்பத்தைக் காண்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் குறைந்தளவு மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக குடிதண்ணீருக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. விரைவாக விநியோகம் குறைந்து வருகிறது.
நகர மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தண்ணீர் டேங்கர்களை கொண்டு விநியோகம் செய்கின்றனர். அதேநேரத்தில் தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் போன்ற அவசர நடவடிக்கைகளுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
ஆனால் கோடை வெயில் மிகவும் வலுவாக இருக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இன்னும் மோசமான நிலை வரும் என்று தண்ணீர் நிபுணர்கள் மற்றும் பல குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
நெடுங்காலமாக இந்த நெருக்கடி இருந்து வந்துள்ளது என்று நீர், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வாழ்வாதார ஆய்வகங்களின் சிந்தனைக் குழுவின் பெங்களூரைச் சேர்ந்த நீர்வியலாளர் ஷஷாங்க் பலூர் கூறினார்.
இந்த கடினமான சூழ்நிலை தொடர்ந்தால் பெங்களூரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை உருவாகிவிடும் என சோகத்துடன் பலூர் கூறுகிறார்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications