கர்நாடகத் தலைநகர் பெங்களூரில் இதுவரை இல்லாத அளவுக்கு குடிநீருக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க முடியாமல் கார்ப்பொரேஷன் நிர்வாகம் திணறுகிறது.
இந்த நிலையில் ஐடி ஊழியர்கள் தங்களுக்கு வொர்க் பிரம் ஹோம் வசதி தரவேண்டும் என்றும், கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் கிளாஸ்களை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர் மக்களின் மோசமான நிலையை இந்த செய்தி வெளிக்கொண்டு வந்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த பவானி மணி முத்துவேல் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு சமைக்க, சுத்தம் செய்ய, வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்த இந்த வாரம் வெறும் 100 லிட்டர் குடிநீர் தான் கிடைத்துள்ளது.
குளிப்பதற்கும் கழிவறைக்கும், துணை துவைப்பதற்கும் இதனால் மிகவும் சிரமமாக இருப்பதாக பவானி மணி கூறியுள்ளார்.
அம்பேத்கர் நகரைச் சேர்ந்த இவர் கூறுகையில், நாங்கள் பொதுவாக நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கிறோம், ஆனால் அது வறண்டு கொண்டிருக்கிறது. 40 வருடங்களில் தான் அனுபவித்த மிக மோசமான தண்ணீர் நெருக்கடி இது என்று அவர் கூறினார்.
பெங்களூரின் ஒயிட்ஃபீல்ட் சுற்றுப்புறத்தில் உள்ள பல உலகளாவிய சாப்ட்வேர் நிறுவனங்களின் ஆடம்பரமான தலைமையகத்தின் அருகே உள்ள ஆடம்பரமற்ற குடியிருப்பு பகுதிதான் அம்பேத்கர் நகர்.
பெங்களூரு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வழக்கத்துக்கு மாறான வெப்பத்தைக் காண்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் குறைந்தளவு மழை பெய்துள்ளது. பல பகுதிகளில் நீர்மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதன் விளைவாக குடிதண்ணீருக்கான செலவுகள் அதிகரித்துள்ளது. விரைவாக விநியோகம் குறைந்து வருகிறது.
நகர மற்றும் மாநில அரசு அதிகாரிகள் தண்ணீர் டேங்கர்களை கொண்டு விநியோகம் செய்கின்றனர். அதேநேரத்தில் தண்ணீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல் போன்ற அவசர நடவடிக்கைகளுடன் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.
ஆனால் கோடை வெயில் மிகவும் வலுவாக இருக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இன்னும் மோசமான நிலை வரும் என்று தண்ணீர் நிபுணர்கள் மற்றும் பல குடியிருப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.
நெடுங்காலமாக இந்த நெருக்கடி இருந்து வந்துள்ளது என்று நீர், சுற்றுச்சூழல், நிலம் மற்றும் வாழ்வாதார ஆய்வகங்களின் சிந்தனைக் குழுவின் பெங்களூரைச் சேர்ந்த நீர்வியலாளர் ஷஷாங்க் பலூர் கூறினார்.
இந்த கடினமான சூழ்நிலை தொடர்ந்தால் பெங்களூரைவிட்டு வெளியேற வேண்டிய நிலைமை உருவாகிவிடும் என சோகத்துடன் பலூர் கூறுகிறார்.
Story Written by: I.Jayachandran
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications