பணக்காரர்களுக்கு பிடித்த பெங்களூரின் பில்லியனர் ஸ்ட்ரீட்.. இங்கு 1 சதுர அடி நிலம் எவ்வளவு தெரியுமா?

பெங்களூர் பெரிய மெட்ரோ நகரங்களில் ஒன்று. இங்கு பல பில்லியனர்களும் தங்களுக்கு சொந்தமாக ஒவ்வொரு குடியிருப்புகளை வெவ்வேறு பகுதிகளில் வைத்திருக்கின்றனர். முன்னணி தொழில்நுட்ப மையமாக இருப்பதால் இந்த பகுதிகளில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் சொத்து விலைகள் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை எட்டியுள்ளன. அதுவும் சில பகுதிகளில் எல்லோராலும் இடம் வாங்க முடியாத நிலையும் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பகுதிதான் கோரமங்களாவின் 3-வது பிளாக். பெங்களூருவின் "பில்லியனர் ஸ்ட்ரீட்" என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் சொத்து விலைகள் பிற பகுதிகளை விட காஸ்ட்லி.

சவுத் ஈஸ்ட் பெங்களூரில் உள்ள இந்தப் பகுதி, ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் வரை பல்வேறு பணக்காரர்களை ஈர்த்து வருகிறது. அவ்வப்போது பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்து பில்லியனர்கள் இங்கு சொத்து வாங்கியது குறித்த தகவல்கள் செய்திகளில் வெளியாகும்.

 பணக்காரர்களுக்கு பிடித்த பெங்களூரின் பில்லியனர் ஸ்ட்ரீட்.. இங்கு 1 சதுர அடி நிலம் எவ்வளவு தெரியுமா?

பெங்களூரின் ரியல் எஸ்டேட் வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக குவெஸ் கார்ப் நிர்வாக இயக்குனரான அஜித் ஐசக் 10,000 சதுர அடி நிலத்தை இந்தப் பகுதியில் ரூ.67.5 கோடி கொடுத்து வாங்கினார். அதற்கு முன்னதாக டிவிஎஸ் மோட்டார்ஸ் "பில்லியனர் ஸ்ட்ரீட்" பகுதியில் ஒரு சதுர அடி நிலத்தை ரூ. 68,597 என்ற விலையில் வாங்கியது. இந்தப் பகுதிகளில் தொடர் விலை அதிகரிப்புக்கு காரணம் இங்கு தேவை அதிகம் இருந்தும் இடம் குறைவாகவே உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Housing.com-இன் தரவுகளின் படி கோரமங்களா 3-வது பிளாக்கில் சொத்து விலைகள் கடுமையாக அதிகரித்திருப்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. 2024-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மட்டும் சொத்து விலைகள் தோராயமாக 9.5 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது. தற்போது இங்கு 1 சதுர அடி நிலம் 35,000 ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலண்டோடு ஒப்பிடுகையில் மிகவும் 3,000 ரூபாய் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் 32,000 ரூபாய்க்கு ஒரு சதுர அடி விற்பனை செய்யப்பட்டது.

பிரத்தியேகமாக இந்த 3-வது பிளாக் தான் உயர் சொத்து விலைகளைக் கொண்டு முன்னணியில் உள்ளது. ஏனெனில் இங்கு பில்லியனர்கள் மற்றும் வணிக ஜாபவான்கள் மட்டுமே இடங்களை வாங்கி வருகின்றனர்.

வசதிகள்: ஆடம்பர குடியிருப்புகக்கு அப்பால், இந்தப் பகுதி பன்னேர்கட்டா சாலை, பெல்லந்தூர் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி போன்ற முக்கிய வேலைவாய்ப்பு மையங்களுக்கும், சிறந்த பள்ளிகள், ஷாப்பிங் மையங்கள் மற்றும் சுகாதார வசதிகளுக்கும் அருகாமையில் உள்ளது.

பிசினஸ் டைக்கூன்களின் குடியிருப்பு: ஃபிளிப்கார்ட் இணை நிறுவனர் சச்சின் பன்சால், இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்கள் நந்தன் நிலேகனி மற்றும் கிறிஸ் கோபாலகிருஷ்ணன், மற்றும் நாராயணா ஹெல்த் நிறுவனத்தின் டாக்டர் தேவி ஷெட்டி உள்ளிட்ட நபர்கள் இந்த இடத்தை தங்கள் வீடாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தப் பகுதியின் கட்டிடக்கலை பாரம்பரிய வில்லாக்கள், நவீன வீடுகள் ஆகியவை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பல சொத்துக்கள் தனியார் தோட்டங்கள், குளங்கள் மற்றும் ஜிம்கள் உள்ளிட்ட ஆடம்பர வசதிகளையும், சோலார் பேனல்கள் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற இலை முக்கிய அம்சங்களையும் கொண்டுள்ளன.

ஸ்கொயர் யார்டின் தரவுகளின் படி கோரமங்களாவில் ஒரு சதுர அடி விலை 2024-ஆம் ஆண்டில் 19,149 ரூபாயாக உயர்ந்தது. இது 2023-ஆம் ஆண்டில் 13,355 ரூபாயாக இருந்தது. 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ஆம் ஆண்டில் 40 சதவீதம் வரை சொத்து விலைகள் அதிகரித்தன. அதேபோல இந்த பகுதியில் வாடகை விலைகளும் அதிகம். 2023 ஆம் ஆண்டில் ரூ.49,500 முதல் ரூ.90,000 ஆக இருந்த வீட்டு வாடகை 2024-ஆம் ஆண்டில் 48,000 முதல் 1,34,400 ரூபாய் வரை அதிகரித்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+